தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்து வந்த நடிகை ரம்பா கனடாவை சேர்ந்த ஈழத்தமிழ் தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து மூன்று குழந்தைகளுக்கு தாயானார். அதன்பின் சினிமாவில் இருந்து விலகி இருந்த ரம்பா, மீண்டும் தற்போது நடிக்க ஆரம்பிக்கவுள்ளார். சமீபத்தில், ரம்பாவின் கணவர் Magick Home ஷோரூமை ஆரம்பித்திருந்தார். அதன் திறப்பு விழாவிற்கு நடிகை தமன்னா தான் நடத்தி வைத்திருக்கிறார். இந்நிலையில் நடிகை ரம்பாவின் கணவர், தமன்னா இருவரும் அதன்பின் நெருக்கமாகிவிட்டார்களாம்.
பிப்ரவரி 9 ஆம் தேதி யாரில் Northern Uni நடத்தும் கான்செர்ட் நிகழ்ச்சி ஒன்றில் பல பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர். நிகழ்ச்சிக்கு நடிகை ரம்பா வரும் நிலையில், தமன்னாவும் கலந்து கொள்கிறாராம். இது ரம்பாவிற்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம். நிகழ்ச்சியில் இதுபற்றி ரம்பா, தன் கணவர் விவகாரம் பற்றி தமன்னாவிடம் பேசுவாரா என்று அப்போது தான் தெரியவரும்.சமீபத்தில் கூட பேட்டியொன்றில் நடிகை ரம்பா, நான் இதுவரை எனது கணவரை இன்ஸ்டாகிராமில் ஃபாலோவ் செய்யவில்லை.
ஏனெனில் நான் அவரிடம் சொன்னேன், நீங்கள் என்னைத்தான் முதலில் ஃபாலோ செய்ய வேண்டும் என்று. ஆனால் அவர் தமன்னாவை ஃபாலோ செய்தார். அப்போது சரி நீங்கள் அவளையே வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். எனக்கு அதில் சந்தோஷம் தான். இருந்தாலும் ஒரு மனைவியா எனக்கு தானே முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என்று கலகலப்பாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.