தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருபவா் சுரேக்கா வாணி. தமிழில் விஜய்யின் மெர்சல், அஜித்தின் விஸ்வாசம், தனுஷின் உத்தமபுத்திரன், தெய்வ திருமகள், எதிர் நீச்சல், ஜில்லா, உதயம் NH4 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளாா். தொடர்ந்து தெலுங்கில் துபாய் சீனு, ஸ்ரீமந்தடு, நில டிக்கெட் போன்ற படங்களிலும் நடித்துள்ளாா் தெலுங்கு திரையுலகில் பிரபலமான சுரேஷ் தேஜாவை காதலித்து திருணம் செய்து கொண்டாா். சுரேஷ் தேஜா, தெலுங்கில் மா டாக்கீஸ், ஹார்ட்பீட், மொகுட்ஸ் பெல்லம்ஸ் உள்ளிட்ட பல டிவி நிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார். முன்னணி நடிகையாக வலம் வந்த சுரேகா வாணி மொட்டை அடித்துள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை சுரேகா வாணி தனுஷ் நடிப்பில் வெளிவந்த உத்தமபுத்திரன், விஜய்யுடன் மெர்சல், அஜித்துடன் விசுவாசம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சுரேகா வாணி.இவர் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நிலையில், இவரது கணவர் சுரேஷ் தேஜா கடந்த 2019ம் ஆண்டு திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தார்.இவர்களுக்கு சுப்ரிதா என்ற மகள் உள்ள நிலையில், கணவர் மறைவிற்கு பின்பு மகளுடன் தனியாக வசித்து வருகின்றார். அவ்வப்போது சோசியல் மீடியாவிலும் ஆக்டிவ்வாக இருந்து வருகின்றார்.
மொட்டை தலையுடன் வெளியிட்ட புகைப்படம் தற்போது 46 வயதாகும் சுரேகா வாணி இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக டோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகின்றது.ஆனால் இதுகுறித்து சுரேகா வாணி எந்தவொரு கருத்து தெரிவிக்காமல் மௌனம் காத்து வருவதுடன், நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.தற்போது மொட்டையடித்து இருக்கும் புகைப்படம் வெளியாகிள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.