பீரியட்ஸ் நேரத்தில்தான் அதை கரெக்டா பண்ணுவாங்க…! முடியாதுனு சொல்லுவேன் அப்போ கூட விடமாட்டங்க…! உண்மையை உடைத்து கூறிய நடிகை அஞ்சலி…!

பீரியட்ஸ் நேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் நடிக்கும் அனுபவங்கள் குறித்து நடிகை அஞ்சலி பேசியுள்ளார். நடிகை அஞ்சலி இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான ‘கற்றது தமிழ்’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பால் ரசிகர் பலரையும் கவர்ந்தார்.தொடர்ந்து ஆயுதம் செய்வோம், தூங்கா நகரம், கோ, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை, இறைவி, தரமணி, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த அஞ்சலியை சுற்றி சில சர்ச்சைகள் எழுந்தன. இதனால் சினிமாவிலிருந்து சில காலம் விலகியிருந்தார். தற்போது மீண்டும் அவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

பேட்டி ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அஞ்சலி, பீரியட்ஸ் நேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் நடிப்பது குறித்து பேசியுள்ளார்.அவர் பேசியதாவது “எனக்கு எப்போதெல்லாம் பீரியட்ஸ் நேரம் வருகிறதோ அப்போதுதான் மழையில் நனைந்தபடி நடிக்கக்கூடிய காட்சிகள் வரும். அப்போதுதான் குளிப்பது போன்ற காட்சிகள் வரும்.ஈரமான உடைகளை அணிந்து கொண்டு நடிக்க கூடிய காட்சிகள்,

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய காட்சிகள் நடிக்க வேண்டியது வரும். கடினமான நடன அசைவுகள் இருக்கக்கூடிய காட்சிகளை எல்லாம் அப்போதுதான் வைப்பார்கள்.இது எனக்கு ஒரு விதமான கடுப்பாக இருக்கும். அப்போதுதான் பாடல் காட்சிகள் வரும். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய காட்சிகள் வைப்பார்கள். அதனால் என்னுடைய பீரியட்ஸ் நேரங்களில் இயக்குநரிடம் இப்படியான காட்சிகள் எல்லாம் எடுக்க வேண்டாம் என்று கூறிவிடுவேன்” என்று பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *