தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு… மகன் சொன்ன பதிலைக்கேட்டு ஆடிப்போன குடும்பம்…! பேரன் அதிரடி…. தாத்தா ரஜினிகாந்த் எடுத்த முக்கிய முடிவு…!!

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். வெளியுலகத்திற்கே இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும் குடும்பத்திற்குள் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே பல நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. பல பிரச்சினைகள் உலா வந்து கொண்டிருக்க, அவர்களின் மகன்களிடம், அம்மா, அப்பா விவாகரத்துக்குப் பிறகு யாருடன் வாழ விரும்புகிறீர்கள் என்று ரஜினி கேட்டாராம். அதற்கு யாத்ராவோ, எனக்கு இரண்டு பேருமே வேண்டும்.

நான் ஒருவருடன் மட்டும் இருக்க விரும்பவில்லை. அதற்கு, இதே கேள்வியை தனுஷ் மற்றும், ஐஸ்வர்யாவிடம் கேட்டால் அவர்கள் என்ன சொல்வார்களோ?, அது தான் எனது பதில் என்று பதிலளித்து ஆச்சரியப்படுத்தியுள்ளாராம் மகன் யாத்ரா. மகன் சொன்ன பதிலைக் கேட்டு மகன்களுக்காக அவர்கள் தங்கள் முடிவை பரிசீலனை செய்வார்கள் என கூறப்படுகிறது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து மகன் கூறிய அதிரடி பதிலால் குடும்பமே திக்குமுக்காடி போனதுடன் நடிகர் ரஜினி மீண்டும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் – ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ரா தனது பெற்றோர் பிரிவு குறித்து கேட்ட ஒரே ஒரு கேள்விதான் இன்று சமூகவலைத்தளத்தின் பேச்சு பொருளாக மாறியுள்ளது. யாத்ராவுக்கு 15 வயது என்பதால் அவர் கேட்கும் கேள்விகளுக்கு சிலசமயம் தாத்தாவான ரஜினிகாந்திற்கே பதில் சொல்ல முடியாத அளவு தடுமாற்றமாக இருக்குமாம். அந்த அளவிற்கு அவர் புத்திசாலித்தனமாக வளர்ந்துள்ளார். இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நிரந்தரமாக பிரிந்தால் நீங்கள் யாருடன் இருக்க விரும்புகிறீர்கள் என யாத்ராவிடம் கேட்டதற்கு,

‘என் அம்மாவிடம் அவருடைய அப்பா அல்லது அம்மா இருவரில் யாராவது ஒருவருடன் தான் இருக்க வேண்டும் என்று கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார்? என்றும் இதே கேள்வியை எனது அப்பாவிடம் கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார்? என்றும் திருப்பி கேள்வி கேட்டதால் கேள்வி கேட்டவர்கள் வாயடைத்து விட்டதாக கூறப்படுகிறது. யாத்ராவின் இந்த கேள்வி குறித்து ஐதராபாத்தில் இருக்கும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு தெரிய வந்ததாகவும் இந்த கேள்விக்கு அவர்கள்

இருவராலும் பதில் சொல்ல முடியாத அளவுக்கு திக்குமுக்காடி போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதிக்கு யாத்ரா மற்றும் இல்லை 11 வயதில் லிங்கா என்ற மகனும் உள்ளனர். பேரனின் இந்த அதிரடி கேள்வியை அடுத்து தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து விடயத்தில் நடிகர் ரஜினி மீண்டும் தலையிட்டுள்ளார். ரஜினிகாந்த் மற்றும் கஸ்தூரிராஜா ஆகிய இரு தரப்பும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை இணைத்து வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றதாம்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே விவாகரத்து குறித்து அறிவித்து விட்டு தங்களின் அடுத்தக்கட்ட பணிகளுக்காக ஐதராபார்த்தில் உள்ளனர். வீடு திரும்பிய பிறகு ரசிகர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும். மகன்களின் எதிர்காலம் கருதி மீண்டும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இணைய அதிக வாய்ப்பு உள்ளது. பார்க்கலாம் ரஜினியின் இந்த முயற்ச்சி வெற்றி பெறுமா என்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *