சனி மற்றும் ராகு பெயர்ச்சியால் ராஜயோகம்: எந்தெந்த ராசிக்காரங்க உச்சம் தெரியுமா?

இந்த அண்டு, ஏப்ரல் மாதத்தில் சனி பெயர்ச்சியும், பின்னர் ராகு பெயர்ச்சியும் நடக்கவுள்ளன. இந்த இரு பெயர்ச்சிக்குப் பிறகு குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். கடந்த ஆண்டு சில ராசிக்காரர்கள் சனியின் தாக்கத்தை எதிர்கொண்டுள்ளனர். 2022 ஏப்ரலில் சனி பெயர்ச்சி ஆன பிறகு இந்த ராசிக்காரர்களுக்கு நிம்மதி கிடைக்கும். சனிப்பெயர்ச்சியால் பிரச்சனைகள் தீர்ந்து, நடக்காமல் இருந்த பல பணிகள் நிறைவேறும்.

கடந்த வருடங்களில் சிரமப்பட்டு வந்த ரிஷப ராசிக்காரர்கள் தற்போது பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடுவார்கள். தற்போது ராகு ரிஷப ராசியில் உள்ளார். பெயர்ச்சிக்குப் பிறகு இந்த ராசியிலிருந்து பெயர்ந்து மேஷ ராசியில் நுழைகிறார். ராகு கிரகம் வெளியேறியவுடன், ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும்.

எனவே, 2022-ம் ஆண்டு அவர்களுக்குப் பலன் அளிக்கப் போகிறது. தொழிலில் பெரிய வெற்றியைப் பெறுவார்கள். கெட்ட நண்பர்களிடமிருந்து விலகி இருங்கள். மிதுன ராசிக்காரர்களுக்கும் இந்த ஆண்டு நல்ல செய்திகளைக் கொண்டு வரப் போகிறது. இந்த வருடம் சனியின் மோசமான தாக்கத்திலிருந்து விடுதலை கிடைக்கும். 29 ஏப்ரல் 2022 அன்று சனி தனது ராசியிலிருந்து மாறுகிறார்.

இத்துடன் இந்த ராசிக்காரர்களின் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கோபத்தையும் ஆணவத்தையும் தவிர்க்கவும். மேலும், வயதானவர்கள் மற்றும் பெண்களை மதிக்கவும். மீன ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு கிரக நிலை மிகவும் சாதகமாக உள்ளது. மீன ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

வியாபாரத்தில் பதவி உயர்வு, அதிக லாபம் ஆகியவை கைகூடும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, மீன ராசிக்காரர்களுக்கு வருடம் முழுவதும் வெற்றிகரமானதாக இருக்கும். சுயநலவாதிகள் மற்றும் ஏமாற்றுக்காரர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *