கல்யாணத்துக்கு முன்னர் ரெண்டு வருஷம் டேட்டிங்…! நரேன் பற்றி அவர் மனைவி பகிர்ந்த அதிர்ச்சி தகவல்…!

நிழல்குத்து என்ற படத்தின் மூலம் ஆடுர் கோபாலகிருஷ்ணன் நடிகர் நரேனை நடிகராக அறிமுகப்படுத்தினார்.அந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று, மலையாள சினிமாவில் அதிக வாய்ப்புகளைப் பெற்றார். அவரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியது மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி மற்றும் அஞ்சாதே ஆகிய திரைப்படங்கள். அந்த இரண்டு படங்களும் ஹிட்டாக அவருக்கு பள்ளிக்கூடம், நெஞ்சிருக்கும் வரை, முகமூடி என ஏராளமான வாய்ப்புகளைப் பெற்று தந்தது.

ஆனாலும் அவரால் முன்னணி ஹீரோவாக வலம் வரமுடியவில்லை. ஆனால் துணைக் கதாபாத்திரத்தில் அவர் நடித்த கைதி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று தந்தது. அதன் பின்னர் விக்ரம் படத்திலும் அவர் கமல்ஹாசனோடு இணைந்து நடித்தார்.கடந்த 2007 ஆம் ஆண்டு தொகுப்பாளினி மஞ்சு ஹரிதாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுகு 14 வயதில் தன்யா என்ற மகள் இருக்கிறார். அதையடுத்து இப்போது அவர்களுக்கு ஓம்கார் என்ற மகன் பிறந்துள்ளான்.

இந்நிலையில் மஞ்சு ஹரிதாஸ் தற்போது அளித்த ஒரு நேர்காணலில் திருமணத்துக்கு முன்னர் நாங்கள் இருவரும் இரண்டு ஆண்டுகள் டேட்டிங் செய்தோம். அதன் பின்னர்தான் நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தோம் எனக் கூறியுள்ளார்.மேலும் நரேன் தான் நடிக்கும் படத்தின் கதைகளை எல்லாம் தன்னிடம் சொல்வார் என்றும், ஆனால் அதைக் கேட்டுக் கொள்வதோடு சரி, மேற்கொண்டு தலையிடுவதில்லை என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *