கணவரை பிரிந்த பின் முதல் முதலாக வெளியே தலைகாட்டிய ஷங்கரின் மகள்…! கொஞ்சம் கூடகவலை இல்லாமல்ஊர் சுற்றும் அதிதி …! இதோ புகைப்படத்தை பார்த்து வியப்பில் ரசிகர்கள்…!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இயக்குநர் ஷங்கர். ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஷங்கர் தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், அர்ஜூன், விஜய் என முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.தற்போது கமலின் இந்திய 2 மற்றும் தெலுங்கு ஹீரோ ராம்சரணின் படம் என இரண்டு பெத்த பட்ஜெட் படங்களை கைவசம் வைத்துள்ளார். இயக்குநர் ஷங்கர் ஈஸ்வரி தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

திருமணத்தின் போது கொரோனா கட்டுப்பாடுகள் நிலுவையில் இருந்ததால் திருமண வரவேற்பை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தார் ஷங்கர். ஆனால் அதற்குள் ஷங்கரின் மருமகன் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். இவர் கடந்த 2022 ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தாலும் அதிதி மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்குகிறார்.சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அதிதி ஷங்கர், தற்போது தன்னுடைய அக்காவுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் கிளாமரான ஆடையில் போஸ் கொடுத்திருப்பார். அதிதியின் அக்கா ஐஸ்வர்யா TNPL கிரிக்கெட் வீரரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக சோசியல் மீடியாவில் கூறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *