முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு …! 16 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்த நடிகர்…! அதிர்ச்சியில் ரசிகர்கள் …!

நடிகர் கார்த்திக்குமார் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னைவிட 16 வயது குறைவான பெண்ணை 2-வதாக திருமணம் செய்திருக்கிறார். தமிழில் ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் அறிமுகமானவர், நடிகர் கார்த்திக்குமார் (ஷாலினியை பெண் பார்க்க வருபவர்). ‘கண்ட நாள் முதல்’, ‘யாரடி நீ மோகினி’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘தெய்வ திருமகள்’, ‘வெப்பம்’, ‘மன்னர் வகையறா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி பாடகி சுசித்ராவிடம் இருந்து 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இந்த நிலையில் 44 வயதான கார்த்திக்குமார் 2-வது திருமணம் செய்திருக்கிறார்.

தன்னை விட 16 வயது குறைவான அம்ருதா சீனிவாசன் எனும் நடிகையை திருமணம் செய்துள்ளார். அம்ருதா ‘அவியல்’, ‘மேயாத மான்’, ‘தேவ்’ உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் ஆவார். இவர்களது திருமணம் சென்னையில் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டிருக்கிறார்கள். தனது திருமண புகைப்படங்களை நடிகர் கார்த்திக்குமார் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். ‘இனி வாழ்நாள் முழுமைக்கும் உன்னை நான் அதிகம் நேசிக்க போகிறேன்.

என்று தனது மனைவிக்கு அதில் தெரிவித்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. ரசிகர்கள், திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கார்த்திக்குமாரின் முன்னாள் மனைவி சுசித்ரா, சுசி லீக்ஸ் என்ற பெயரில் நடிகர்-நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து பரபரப்பு ஏற்படுத்தியவர். பின்னர் அந்த குற்றச்சாட்டை மறுத்தார். அதனைத்தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்த அவர் ஒருகட்டத்தில் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *