பேஸ்புக் நேரலையில் தற்கொலைக்கு முயன்ற நடிகர்…! ஓடி வந்த போலீஸ்…! பயத்தை ஏற்ப்படுத்திய அதிர்ச்சி சம்பவம்…!

பேஸ்புக் லைவில் பேசிக்கொண்டிருக்கும்போதே தற்கொலைக்கு முயன்ற ரசிகரால் பரபரப்பு ஏற்பட்டது.ரசிகர்களால் ஜுனியர் நானா படேகர் என அழைக்கப்படுபவர் நடிகர் திர்தானந்த் ராவ். திரைப்படங்களில் சிறிய வேடங்களில நடித்து வரும் இவர் கபில் சர்மா ஷோ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாகியிருக்கிறார்.சமூக வலைதளங்களில் நேரலையில் ரசிகர்களுடந் பேசிய அவர், தனது நிலைக்கு ஒரு பெண் தான் காரணம் எனவும் தனக்கு எதாவது நேர்ந்தால் அந்தப் பெண் தான் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.

மேலும் அந்தப் பெண் தன்னை பிளாக்மெயில் செய்வதாகவும் தொடர்ந்து அந்தப் பெண் தன்னிடமிருந்து பணம் வாங்கியதாகவும் அந்தப் பெண்ணால் ரூ.3-4 லட்சம் கடனாளியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.தன்னைப் பற்றி அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் அதற்கு என்ன காரணம் என தெரியவில்லை, அவரை எனக்கு கடந்த வருடம் அக்டோபரிலிருந்துதான் தெரியும் என்றும் பேசினார்.

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு பாட்டிலை எடுத்து அதிலிருக்கும் திரவத்தை கிளாசில் ஊற்றி குடித்திருக்கிறார்.இதைப் பார்த்து அதிர்ச்சியான அவரது நண்பர்கள் அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்ததாகவும் காவல்துறையினர் அவரது வீட்டுக்கு சென்றபோது நினைவிழந்த நிலையில் இருந்த அவரை காவல்துறையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்ததாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *