சற்றுமுன் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அங்காடி தெரு நடிகை சிந்து மரணமடைந்தார்…! அதிர்ச்சியில் திரையுலகம்…! பெரும் சோகத்தில் ரசிகர்கள் …!

அங்காடித் தெரு திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகை சிந்து புற்றுநோயினால் அதிகம் போராடி முடியாமல் இன்று அதிகாலை உயிரிழந்திருக்கிறார். அங்காடித் தெரு சிந்து வசந்த பாலன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் அங்காடித் தெரு. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சிந்து.இவர் 2020ஆம் ஆண்டு புற்றுநோய் இருப்பது அறிந்து அறுவை சிகிச்சை செய்து தனது மார்பகங்களை அகற்றி பல வைத்தியங்கள் பார்த்து இருக்கிறார்.

ஆனால் இந்த நோயில் இருந்து மீள முடியாமல் தன்னை எத்தனையோ முறை விஷ ஊசி போட்டு கொன்னுடுங்க என்றும் பல தடவை கதறியிருக்கிறார். இவர் இந்த நோயால் பெரும் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று அவரின் உயிர் பிரிந்திருக்கிறது.நடிகை சிந்து இன்று அதிகாலை 2.15 மணியளவில் ’அங்காடி தெரு’ சிந்து இயற்கை எய்தினார் என்ற தகவலை நடிகை

கொட்டாச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில், “இன்று அதிகாலை 2.15 அளவில் திரைப்பட நடிகை அங்காடி தெரு சிந்து இயற்கை எய்தினார். அவர், ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என பதிவிட்டிருந்தார். இவரின் மறைவிற்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *