கடந்த காலம் நினைத்து கண்ணீருடன் எமோஷ்னல் பதிவு…! போட்ட சீரியல் நடிகை ரச்சிதா ரசிகர்கள் ஆறுதல்…!

பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழக மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ரச்சிதா. அதன்பிறகு சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்து அதிகம் பிரபலமான இவர் நாம் இருவர் நமக்கு இருவர், நாச்சியார்புரம், இது சொல்ல மறந்த கதை என தொடர்ந்து சீரியல்களில் நடித்துவந்த இவர் விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் தனது கணவர் குறித்து அவர் எதுவும் பேசாததால் பிரிந்துவிட்டார்கள் என ரசிகர்கள் உறுதிப்படுத்திவிட்டார்கள்.

நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு தனது கணவர் தினேஷ் தனது ஆபாச மெசேஜ் அனுப்புகிறார் என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பாடலை போட்டு, வலிமையான அனைத்து ஆன்மாவிற்காக… கடந்த காலங்களை நீங்கள் எப்படி கையாண்டீர்கள் என்று பெருமைப்படுங்கள்.

இந்த மௌன போர்கள், உங்களை தாழ்த்திக் கொள்ள வேண்டிய தருணத்தில் உங்கள் தாழ்த்திக் துடைத்துக் கொண்ட உங்கள் முதுகில் உங்களை தட்டிக் கொள்ளுங்கள் பாடலில் ஆழமாக போகிறேன் கண்களை நிறைக்கும் அந்த மந்திர வார்த்தைகள் என்று பதிவிட்டு இருக்கிறார். ரச்சிதாவின் பதிவை கண்ட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *