அந்த உறவால் வாழ்க்கையே நாசமாகிவிட்டது…! பிரபல விஜய் பட நடிகை வேதனை…! திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்…!

தனது சினிமா வாழ்க்கை குறித்து நடிகை அமீஷா படேல் பேசியுள்ளார். நடிகை அமீஷா படேல்
‘கஹோனா பியார் ஹே’ என்ற இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமீஷா படேல். இந்தப் படம் வசூலில் பெரும் சாதனை படைத்தது. அதன்பின் தமிழில் விஜய்யின் புதிய கீதை படத்தில் நடித்தார். அதே வருடத்தில் தெலுங்கி பவன் கல்யாண் ஜோடியாக பத்ரி என்ற படத்தில் நடித்தார். இவ்வாறு ஹிட் படங்களையே தந்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென இந்தி டைரக்டர் விக்ரம் பட்டுவை காதலிப்பதாக அறிவித்தார்.

சினிமா வாய்ப்பு ஆனால் சில காலங்களில் இருவரும் பிரிந்து விட்டனர். இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “சினிமா துறையில் நேர்மைக்கு இடம் இல்லை. டைரக்டர் விக்ரம் பட்டுவை காதலிப்பதாக நான் வெளியில் சொன்னதால் 13 ஆண்டுகளாக எனக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனது சினிமா வாழ்க்கையே நாசமாகி விட்டது. என் வாழ்க்கையில் இன்னொருவருக்கு இடம் அளிக்கவில்லை. இப்போது மன அமைதி மட்டுமே என்னோடு இருக்கிறது. வாழ்க்கையில் வேறு எதுவும் எனக்கு தேவை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *