நடிகை கீர்த்தி சுரேஷ் ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை அளித்துள்ளது. கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் கீர்த்தி சுரேஷ், தேசிய விருதை பெற்ற நிலையில், அடுத்தடுத்து படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார். ஆனால் இவரது திருமணம் குறித்து பல வதந்திகள் பேசப்பட்டு வருகின்றது. ஆம் கீர்த்தி சுரேஷ் அனிருத், கல்லூரி நண்பர், தொழிலதிபர் என பலரையும் வைத்து காதல் சர்ச்சை எழுந்து வரும் நிலையில்,
தற்போதும் சர்ச்சையை ஏற்படுத்தும் புகைப்படம் வெளியாகியுள்ளது. சமீபத்தில் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் பர்ஹான் என்பவருடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து புகைப்படம் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தது மீண்டும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் ஒரே நிறத்தில் ஆடையணிந்திருந்ததால் கிசுகிசுக்கப்பட்டனர். பின்பு இந்த பிரச்சினைக்கு அவரது தந்தையே முற்றுப்புள்ளி வைத்தார்.ஆணுடன் நெருக்கமாக கீர்த்தி சுரேஷ்
இந்நிலையில், தற்போது மீண்டும் காதல் சர்ச்சையில் சிக்கி உள்ளார் கீர்த்தி சுரேஷ். அதன்படி ஆண் நண்பர் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷை கட்டியணைத்தபடி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாக பரவி வருகின்றன. ஒருவேளை இவர் தான் கீர்த்தியின் காதலராக இருப்பாரோ என சந்தேகப்பட்ட நெட்டிசன்கள், இவர் யார் என்பதை அலசி ஆராய்ந்து வருகின்றனர். தற்போது இவரும் கீர்த்தி சுரேஷின் நண்பர் என்பது தெரியவந்துள்ளது.