லிப்லாக்-க்கு ஓகே அந்த காட்சியா வேண்டவே வேண்டாம்…! கேரவனில் அழுத நடிகை அஞ்சலி கூறிய உண்மை…! வெளியான வீடியோவால் பெரும் பரபரப்பு …!

தமிழில் சினிமாவில் அங்காடி தெரு படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை அஞ்சலி. தெலுங்கு திரை உலகின் மூலம், நடிகை அஞ்சலி தன்னுடைய திரையுலக வாழ்க்கையை துவங்கி இருந்தாலும். இவரின் திறமையான நடிப்பை வெளிக்கொண்டு வந்தது என்னவோ தமிழ் சினிமா தான்.இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவான ’கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. அந்த படத்தில் அவர் ஆனந்தி என்ற கேரக்டராகவே வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான ‘அங்காடி தெரு’, ‘தூங்கா நகரம்’,

‘எங்கேயும் எப்போதும்’, ‘வத்திக்குச்சி’, ‘இறைவி’, போன்ற படங்கள் இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிக முக்கிய படங்களாக அமைந்தன.தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் என்ற படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் திரையுலகில் அஞ்சலி நடிகையாக எண்ட்ரி ஆகி 17 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது அவர் தனது 50வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை கிரீன் அமியூஸ்மெண்ட் மற்றும் டி3 புரொடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

நடிகை அஞ்சலி நடிக்கும் 50-ஆவது படத்திற்கு ‘ஈகை’ என பெயரிடப்பட்டுள்ளது.இந்த நிலையில் சமீபத்தில் அஞ்சலி ஒரு பேட்டியில் திருமணம் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், நல்ல பையன கல்யாணம் பண்ணுங்க என்று அஞ்சலி கூறியுள்ளார்.அப்போது நல்ல பையன்னு நான் நினைக்குறது, திருமணத்திற்கு பிறகு முதலில் மரியாதையாக நடத்த வேண்டும் அதன் பிறகுதான் அன்பு மற்றும் காதல் எல்லாம். அப்படி இருக்கும் பையனை எனக்கு பிடிக்கும் என்றும் தனது நண்பர்களுக்கும் அந்த மாதிரி ஆட்களை

திருமணக் செய்துகொள்ளுங்கள் என்று கூறுவேன் என்றும் அஞ்சலி தெரிவித்துள்ளார் .  அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அஞ்சலி நடிகர் ஜெய்யிடம் காதலில் இருந்து வந்தார். சில காரணங்களால் ஜெய் பக்கமே போகாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் லிப்லாக் சீன் அல்லது நெருக்கமாக சீனில் எது டஃப் அல்லது முகம் சுளிக்க வைக்கிறது என்ற கேள்விக்கு நெருக்கமான சீன் என்று கூறியிருக்கிறார் அஞ்சலி.

நெருக்கமான காட்சின்னா எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம். சில நேரங்களில் கேரவனில் போய் அழுதுட்டு வந்ததெல்லாம் நடந்திருக்கு. லிப்லாக்-னா இதுக்கு மேல போகும்றது நமக்கு தெரியும். என்னதான் நமக்கு பிடிக்காதவர் நம்ம தொடுகிறார் என்று எடுத்துக் கொள்ளமுடியாது ஷூட்டிங்கில் 50 பேர் இருந்தாலும், நடிகர் எப்படியானவர் என்று தெரியாது, சமீபத்தில் கூட அந்த சம்பவம் நடந்து இருக்கு, அதனால் லிப்லாக்கில் நடிப்பது ஆறுதலான இருக்கும் என்று கூறியிருக்கிறார் அஞ்சலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *