மாடியிலிருந்து தவறிவிழுந்த நடிகை மரணம்…! பெற்றோர் எடுத்த அதிர்ச்சி முடிவு…! அப்படி என்ன செய்தார்கள் என்று உங்களுக்கு தெரியுமா…?

தென் கொரியாவைச் சேர்ந்த நடிகை ஒருவர் மாடியிலிருந்து தவறிவிழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை பார்க் சூ ரியன் தென் கொரியாவை சேர்ந்தவர் பார்க் சூ ரியன் (Park soo ryun). 29 வயதாகும் இவர் 2018-ம் ஆண்டு ரிலீஸ் ஆன டெனர் என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல்வேறு கொரிய மொழி படங்களில் நடித்து பிரபலமான இவர், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள ஜெஜு தீவிற்கு சென்றுள்ளார்.

அங்கு மாடியிலிருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் குறித்த நடிகைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவியை இழந்துள்ளார். பின்பு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.மூளைச்சாவு ஏற்பட்ட பின்பு உயிரைக் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் கூறியதால், பார்க் சூ ரியனின்

உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர்கள் முடிவு எடுத்துள்ளனர். புகழ்பெற்ற கொரிய நடிகையான பார்க் சூ ரியன், 29 வயதில் மரணமடைந்து இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவுக்கு ரசிகர்கள் பலரும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கண்ணீர்மல்க இரங்கல் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *