புருஷனால் தவறான தொழிலில் தள்ளப்பட்டேன்…! 10 முறை கருக்கலைப்பு…! கண்ணீருடன் மனம் திறந்த ரவுடி பேபி…!

ரவுடி பேபி சூர்யா தனது கணவர் பற்றி பேட்டி ஒன்றில் கண்ணீர் மல்க பேசியுள்ளார். சூர்யா டிக்டாக் செயலி இருந்த சமயத்தில் பல வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. அதில் இவர் ஆபாசமாக பேசியும், ஆபாசமாக உடைகள் அணிந்தும் வீடியோக்களை பதிவிட்டு பல சர்ச்சைகளில் சிக்கினார். அதற்காக அவர் கைது செய்யபட்டார், ஆனால் தற்பொழுது கெட்டவார்த்தைகள் பேசாமல் நல்ல முறையில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.தற்பொழுது இவர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், இவரது உண்மையான பெயர் சுப்புலட்சுமி என்றும்

அவர் 20 வருடத்திற்கு முன்பு சூர்யா என்று மாற்றிக்கொண்டதாக கூறியுள்ளார்.  பேட்டி இதனை தொடர்ந்து, அவர் பேசுகையில், “எனக்கு 18 வயது இருக்கும்பொழுது மாற்றுத்திறனாளியுடன் திருமணம் ஆனது. ஆனால் அது சரியாக வரவில்லை. பின்னர் நான் திருப்பூரில் வேலைக்கு சென்ற இடத்தில் பாலா என்பவரை திருமணம் செய்துகொள்ளாமலேயே அவருடன் வாழ்ந்தேன். ஆரம்பத்தில் அவரைப்பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை.அதன் பிறகுதான் அவன் ஒரு குடிகாரன் என்று தெரிந்தது.

அவர் தான் என்னை விபச்சார தொழிலுக்கு அனுப்பினார். அப்படி நான் கஷ்டப்பட்டு கொண்டுவரும் பணத்தையும் குடித்துவிடுவார். இதுவரை 10 முறை கருக்கலைப்பு செய்து இருக்கிறேன். கடைசியாக என் இரண்டாவது மகன் கருவுற்றபோதும், கருவை கலைக்கத்தான் மருத்துவமனைக்கு சென்றேன், ஆனால் முடியாமல் போனதால் என் மகனை பெற்றுக்கொண்டேன்” என்று மனம் உருக பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *