பாதுகாப்பை தாண்டி தமன்னா மீது கைவைத்த நபர்…! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா…? வைரலாகும் வீடியோவை கண்டு ஷாக்கான ரசிகர்கள்…!

தென்னிந்திய சினிமாவின் சென்சேஷனல் நடிகையாக மாறியுள்ளவர் தமன்னா. தற்போது நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.ஜெயிலர் படம் வரும் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வருகிறார். ஒரு பேட்டியில், டாப் நடிகர்களிடம் என்ன கேள்வி கேட்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். விஜய்யின் 68 வது படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்பேன் என்றும் நான் நடிப்பதாக வரும் தகவல் பொய் என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனால் தளபதி 68ல் எனக்கு நடிக்க விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அஜித்திடம், அடுத்து எப்போ எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று

கேட்பேன் என தெரிவித்திருக்கிறார். அஜித் நன்றாக சமைப்பார், ஷூட்டிங்கில் அவர் இட்லி செய்து கொடுத்தார், மிருதுவான இட்லியை எங்கேயும் நான் சாப்பிட்டதில்லை. சாப்பாடு மட்டுமல்ல அவருடன் பைக் ரைடுக்கு கூப்பிட்டாலும் போவேன் என்று தெரிவித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 10 -ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் ஜெயிலர் படத்தின் இடம் பெற்றுள்ள காவாலா பாடல் சமூக வலைத்தளங்களில்நல்ல வரவேற்பை பெற்றது வெளியாகி .

சமீபத்தில் தமன்னா ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது ரசிகர் ஒருவர் அங்கு இருந்த பாதுகாவலர்களை தாண்டி வந்து அவரது கையை பிடித்துவிடுகிறார். உடனே அவரை காவலர்கள் பிடித்து வெளியில் அனுப்ப, தமன்னா அவர்களை தடுத்து அந்த இளைஞருக்கு கைகொடுத்து அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டு அனுப்பி வைத்துள்ளார்.தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *