90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையாக திகழ்பவர் தான் சதா. இவர் ஜெயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.ஜெயம் படத்தில் போயா…. போ… என்று நாயகன் ஆசையாக விரட்டும் சுஜாதா, அம்பியை உயிராக நேசித்த நந்தினி என தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் நடிகை சதா. தமிழில் சில படங்களின் மூலம் பிரபலமடைந்த அவர், தற்போது தனது சொந்த வியாபாரம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார். வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதில் இவருக்கு அளவுகடந்த காதல். விலங்குகள் மீதான இவரின் ஈர்ப்பை பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக அறிந்திருப்பார்கள்.
ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் சோகமாக கண்ணீருடன் காட்சியளித்த சதாவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சதா மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர். சதாவின் உண்மையான பெயர் சதாப் முஹம்மது சையத். ரத்னகிரியில் உள்ள சேக்ரட் ஹார்ட் கான்வென்ட் உயர்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு, தெலுங்கில் ஜெயம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தேஜா இயக்கிய, அந்த திரைப்படம் 2002இல் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகும். அதன் மூலம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முழு வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து திருப்பதி,
உன்னாலே உன்னாலே, அந்நியன், போன்ற படங்களில் நடித்திருப்பார். கடைசியாக இவர் தமிழில் டார்ச் லைட் என்ற படத்தில் நடித்திருந்தார். நடிகை நடிகர்களை குறித்து சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வரும் பயில்வான் ரங்கநாதன் தற்போது சதா குறித்து பகிர் குற்றச்சாற்றுகளை முன்வைத்துள்ளார். அதில் அவர், நடிகை சதாவின் கெட்ட பழக்கத்தால் தான் அவரது வாழ்க்கையை பாதித்து இருக்கிறது. சதா எப்போதும் புகைபிடித்து கொண்டு இருப்பார். அதை நானே நேரில் பார்த்து இருக்கிறேன். மேலும் அவர் போதைக்கு அடிமையானதால் பல திரைப்படங்களில் இருந்து நீக்கப்பட்டார் என்று பயில்வான் கூறியுள்ளார்.