திருமண கோலத்தில் இருக்கும் 40 வயது திரிஷா…! புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பெரும் ஷாக்…!

தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்து வைத்துள்ளவர் தான் நடிகை திரிஷா. இவர் சூர்யா நடிப்பில் 2002 -ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அடுத்து கில்லி, குருவி, உனக்கும் எனக்கும், மன்மதன் அம்பு, ராங்கி, விண்ணைத் தாண்டி வருவாயா, அரண்மனை 2, ஆறு, சகலகலா வல்லவன், சம்மர், பரமபதம், உனக்கு 20 எனக்கு 18, ஆதி, சதுரங்கவேட்டை 2 உள்ளிட்ட பல படங்களில் திரிஷா நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக பேட்ட படத்திலும் நடித்தார் திரிஷா. தமிழ் சினிமாவுக்குள் வந்து 20 ஆண்டுகள் கடந்தும், இன்னும் அழகும் இளமையும் மாறாத அழகில் அம்சமாக தெரிகிறார் திரிஷா. வயது, இவரது அழகை மறைக்கிறதே தவிர, இன்னும் 25 வயது பெண் போலவே தோற்றத்தில் காட்சியளிக்கிறார் திரிஷா.

96 படத்துக்கு பிறகு, இன்னும் ரசிகர்களை தன்வசப்படுத்திய திரிஷா பொன்னியின் செல்வன் நடித்த பிறகு, அவரது மார்க்கெட் மேலும் பலமடங்கு உயர்ந்தது. அதுவரை ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த த்ரிஷா, அப்படியே அதை இரட்டிப்பாக்கி விட்டார் என்று கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் 2ம் பாகம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படங்களைத் தொடர்ந்து, இன்னும் இவரது சம்பளம் உயர்வதற்காக வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, பொன்னியின் செல்வன் குந்தவை கேரக்டரில் த்ரிஷாவின் அழகும், மிருதுவான நடிப்பும், மென்மையான பேச்சும் ரசிகர்களை சொக்க வைத்து விட்டது.

இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்வே, திருமண நிச்சயதார்த்தம் வரை வந்த திரிஷா திருமணம் நின்று போனதற்கான காரணம், இப்போது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை திரிஷாவின் அம்மா உமாவே கூறியுள்ளார்.அதாவது சில ஆண்டுகளுக்கு முன், திரிஷாவுக்கும், தொழிலதிபர் வருண் என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவாகி உள்ளது. நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. ஏற்கனவே, பரஸ்பரம் இரு வீட்டாரும் அமர்ந்து பேசி, பல விஷயங்களை கலந்து ஆலோசித்து முடிவு செய்து, ஏறக்குறைய எல்லா விஷயங்களையும் இரு தரப்பினரும் சம்மதித்த பிறகு திருமணம் செய்துகொள்ள முடிவானது. இப்படத்தை விஜய், அஜித், விக்ரம் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார்.

தற்போது விஜய்யுடன் சேர்ந்து லியோ படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் திரிஷா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.திருமணத்துக்கு பிறகு, திரிஷா நடிக்க, மாப்பிள்ளை வீட்டார் சம்மதிக்கவில்லை என்பதும், இதில் முக்கிய காரணமாக தெரிகிறது. இதனால்தான், திரிஷா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல், நடிப்பு தாரகையாக வலம் வருகிறார். இதற்கு ஷாக்கான ரசிகர்கள் திரிஷாவுக்கு திருமணமா? என்று பதிவிட்டு வந்தனர். ஆனால் அது விளம்பரத்திற்காக எடுக்கபட்ட புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *