ரச்சிதா மகாலட்சுமி இந்த பெயரை கேட்டதுமே சின்னத்திரை ரசிகர்களுக்கு நடிகையை நியாபகம் வந்துவிடும். அந்த அளவிற்கு இவர் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நாயகியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் தமிழ் சின்னத்திரை பக்கம் வந்த இவர் சரவணன்-மீனாட்சி என்ற தொடர் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். அதன்பிறகு நாம் இருவர் நமக்கு இருவர், நாச்சியார்புரம், இது சொல்ல மறந்த கதை என தொடர்ந்து சீரியல்கள் நடித்துவந்த ரச்சிதா விஜய் டிவியின் ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸிலும் கலந்துகொண்டார். ஏற்கனவே ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது தான்
ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளப் போகிறேன் என்று கூறியிருந்தார். இதனால் தற்போதைக்கு வீடியோவில் ரச்சிதா வைத்திருக்கும் குழந்தை தான் அந்த குழந்தையா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் அந்த வீடியோ நான் உன்னுடைய அத்தை என்று அந்த குழந்தையை குறித்து செல்லமாக கொஞ்சி இருக்கிறார்.அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா இருக்கும்போது ரச்சிதாவின் அம்மா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அப்போது அவருடன் கூட வந்திருந்த நபர் ரச்சிதாவின் அண்ணன் என்று கூறப்பட்டார்.
கியூட் வீடியோ பிக்பாஸ் நிகழ்ச்சியில் கனவரை பிரிந்ததை குறிப்பிடாமல் எனது வாழ்க்கையில் இனி எனது அம்மா மற்றும் நான் தத்தெடுக்கப்போகும் குழந்தை மட்டும் தான் என கூறியிருந்தார். இந்த நிலையில் தான் அவர் ஒரு கியூட் குழந்தையுடன் எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் தத்தெடுக்க இருப்பதாக கூறியிருந்தாரே என வீடியோவை பார்த்துள்ளனர். ஆனால் அந்த குழந்தைக்கு ரச்சிதா அத்தையாம், தனது உறவினர் குழந்தையுடன் எடுத்த வீடியோவை அவர் வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
View this post on Instagram