குடும்பத்தைப் பிரிந்து மும்பையில் செட்டில் ஆனாது இதற்காகத்தான்…! உண்மை உடைத்த நடிகர் சூர்யா…!

சூர்யா – ஜோதிகா தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா இவர்கள் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் அவரது 42வது படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் மும்பையில் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகாவும் ஒரு காலத்தில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் தான். தற்போது ஜோதிகா ஒரு சில படங்களில் முக்கியத்துவம் இருக்கிற கதைக்கு மட்டுமே கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார்.

மலையாளத்தில் மம்மூட்டியுடன் ஜோடியாக நடித்து வருகிறார் ஜோதிகா. மேலும் சூர்யாவின் 2டி எண்டெர்டெய்ன்மெண்டையும் ஜோதிகாதான் நிர்வகித்து வருகிறார். சூர்யாவின் சூர்யா 42 படம் தான் ரசிகர்களின் பெரும் ஆர்வமாக கருதப்படுகிறது. ஆனால் படம் ஒரு வரலாற்று கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருப்பதால் படப்பிடிப்பும் இன்னும் ஒருவருட காலம் இருக்கும் என தெரிகிறது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் ஜோதிகாவும் சூர்யாவும் மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக சில தகவல்கள் வெளியானது. வெளியானதுடன் பல வதந்திகளும் பரவின. ஜோதிகாவிற்கும் சூர்யாவின் வீட்டிற்கும் பிரச்சினை இருப்பதால் தான் ஜோதிகா

தனிக்குடித்தனம் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் என்ற செய்திகளும் வந்தன. மும்பை செட்டில்.. தற்போது இதுகுறித்து பேசிய சூர்யா, “ சோசியல் மீடியாவில் நான் மும்பையில் செட்டில் ஆகிவிட்டேன் என்று சொல்றாங்க. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல. இரண்டு குழந்தைகளும் மும்பையில படிக்கிறாங்க.அவங்கள பார்க்குறதுக்காகத்தான் அப்பப்ப அங்க போய்ட்டு வர்றேன். மற்ற படி நான் சென்னையிலதான் இருக்கேன். நமது குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருந்து அதுலையும் ஜெயிக்கணும். மனைவிக்கு நல்ல கணவனா இருந்து அதுலையும் ஜெயிக்கணும். இப்படி எல்லாத்தளங்களிலுமே நீங்க ஜெயிக்கணும்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *