காமெடி நடிகர் பாவா லட்சுமணன் மருத்துவமனையில் அனுமதி…! உடலில் இருந்து முக்கிய உறுப்பு அகற்றம்…! கவலையில் ரசிகர்கள்…!

பிரபல தமிழ் காமெடி நடிகர் பாவா லட்சுமணன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கால் கட்டை விரல் அகற்றப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன் ஒரு பேட்டியில் இவர் தனது மருத்துவ செலவுக்கு மயில்சாமி தான் உதவியதாக கூறினார். சினிமாவில் தற்போது எல்லாம் பழைய காமெடி நடிகர்களை திரைகளில் பார்ப்பது மிகவும் குறைந்துவிட்டது. அந்தவகையில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடிகர் வடிவேலுவுடன் நகைச்சுவை காட்சிகளில் தோன்றி ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் தான் நடிகர் பாவா லட்சுமணன்.

இவர் குறிப்பாக சூப்பர்குட் பிலிம்ஸில் மேனேஜராக இருந்ததோடு மட்டுமல்லாமல் சரத்குமார் நடித்த மாயி படத்தில் ‘வாம்மா மின்னல்’ என்ற டயலாக் பேசி பட்டிதொட்டியெங்கும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவ்வாறாக காமெடி, குணச்சித்திரம் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் தனது திறமையை நிரூபிக்கும் அவர், சமீபகாலமாக படங்களில் நடிக்கவில்லை. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நடிப்புக்கு எண்ட் கார்ட் போட்டுவிட்டார்.அதாவது 55 வயதாகும் இவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. அதனால் தான் சமீப காலமாக படங்களில் நடிக்கவில்லை.

இதனிடையே பாவா லட்சுமணனுக்கு திடீரெனெ சர்க்கரை நோய் அதிகமானதால் அவரின் கால் கட்டை விரல் அகற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தற்போது அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விடயமானது ரசிகர்களுக்கு சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வறுமையில் வாடும் நடிகர் பாவா லட்சுமணனுக்கு திரையுலகினர் உதவி செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *