ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடியா…? ஊர்வசி ரவுத்தேலா வாங்கும் சம்பளம்…! ஷாக்கான ரசிகர்கள்…!

சிங் சாப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் 2013ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா.அதனையடுத்து கன்னடத்தில் மிஸ்டர் ஐரவாதா என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். பிறகு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒன்றிரண்டு படங்களில் நடித்தவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் ஆர்ட்டிஸ்ட்டாக மாறிவிட்டார். இதற்கிடையே லெஜண்ட் அண்ணாச்சி சரவணன் நடித்த ‘லெஜண்ட்’படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக என் ட்ரி கொடுத்தார் ஊர்வசி ரவுத்தேலா.

இந்தச் சூழலில் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் புதிய படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஊர்வசி ரவுத்தேலாவிடம் தயாரிப்பு தரப்பு அப்ரோச் செய்திருக்கிறது. அப்போது ஊர்வசி ரவுத்தேலா படக்குழுவுக்கு் பெரும் ஷாக் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதாவது அவர் கேட்ட சம்பளத்தை பார்த்த படக்குழு என்னது இது என்று வாயை பிளந்திருக்கிறார்கள்.

அதாவது அந்தப் பாடலில் மொத்தமே மூன்று நிமிடங்கள்தான் நடனம் ஆட வேண்டுமாம். அதற்கு ஊர்வசி ரவுத்தேலா கேட்ட சம்பளம் மூன்று கோடி ரூபாயாம். இந்தத் தகவலை கேள்விப்பட்ட டோலிவுட் திரையுலகம் ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி ரூபாயா என வாயை பிளந்திருக்கிறது. அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி ரூபாய் பெறும் முதல் நடிகை ஊர்வசிதான் எனவும் ரசிகர்கள் தெரிவித்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *