இறப்பதற்கு முன்பு கடைசி ஆசையை தெரிவித்த பிரபல நடிகை செளந்தர்யா…! அப்படியென்ன ஆசை தெரியுமா…? அதை கேட்டு கண் கலங்கிய ரசிகர்கள் …!

பிரபல நடிகை செளந்தர்யா, தான் உயிரிழப்பதற்கு முன்னர் கேட்ட இரண்டு பொருட்கள் குறித்து அவரது அண்ணி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர், சௌந்தர்யா. இவரது உண்மையான பெயர் சௌமியா. இவர், 20 வருடங்களுக்கு முன்னர் முன்னணி நடிகையாக விளங்கியவர், ஹெலிகாப்டர் விபத்தில் 2004ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவர், தான் இறப்பதற்கு முன்னர் இரண்டு விஷயங்களை தனது அண்ணியிடம் கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் அண்ணி ஒரு பேட்டியில் பேசியுள்ளார். நடிகை சௌந்தர்யா, கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர். இவரது அப்பா, கன்னடத்தில் மிகப்பெரிய தொழிலதிபர்.

நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் தனது மருத்துவ படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டு நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் கன்னட படங்களில் நடித்து வந்த இவர், கொஞ்சம் கொஞ்சமாக பிறமொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார். தெலுங்கு, தமிழ், இந்தி மற்றும் மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக விளங்கினார். குறிப்பாக கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். 12 வருடத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் இவர். ரஜினிகாந்துடன் அருணாச்சலம் மற்றும் படையப்பா ஆகிய படங்களிலும் நடிகர் கமல்ஹாசனுடன் காதலா காதலா ஆகிய படத்திலும் நடித்துள்ளார்.

பிரபல நடிகையாக வலம் வந்த சௌந்தர்யா 2004ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அது, தேர்தல் நடைபெற இருந்த சமயம் என்பதால், அதற்கான கட்சிப்பணிகளிலும் இவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக சௌந்தர்யா தனது சகோதரருடன் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக இவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த விமானம் காந்தி க்ரிஷி விஜயன் கேந்த்ரா என்ற பகுதியில் விபத்துக்குள்ளானது. தரையிரங்குவதர்கு 100 அடி இருக்கும் போது இந்த விபத்து நேர்ந்தது. இன்று வரை இவரது சாவில் மர்மம் இருப்பதாக பலர் சந்தேகிக்கின்றனர்.

சௌந்தர்யா, தான் இறப்பதற்கு முன்னர் தனது அண்ணனின் மனைவியிடம் (அண்ணி) ள்ளார். அப்போது தனக்கு காட்டன் புடவையும் குங்குமமும் வேண்டும் என கேட்டுள்ளார். சௌந்தர்யாவின் அண்ணி சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது நடிகை குறித்து உருக்கமாக பேசிய அவர், இந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டார். நடிகை சௌந்தர்யா உயிரிழக்கையில் அவருக்கு வயது 31. இவர் தான் உயிரிழப்பதற்கு ஓராண்டிற்கு முன்புதான் ஜி.எஸ் ரகு என்பவரை திருமணம் செய்துகொண்டார். அரசியலில் களமிறங்கிய பிறகு அதில் அதிதீவிரமாக மக்களுக்கு நலத்தொண்டுகளும் செய்து வந்தார்.

பெற்றோர்களற்ற குழந்தைகளுக்காக 3 பள்ளிகளை திறந்து வைத்தவர் இவர். 90ஸ் கதாநாயகிகளிலேயே மக்கள் நலப்பணியாற்றுவதில் மிகவும் கவனம் செலுத்திய ஒரே நடிகை இவர் மட்டும்தான். சௌந்தர்யா பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தது சில அரசியல் கட்சிகளுக்கு பிடிக்காததால் இந்த விபத்தை அவர்கள் ஏற்படுத்தியிருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால், இன்று வரை இவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்து சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை. சௌந்தர்யா, தான் இறக்கும் போது 7 மாத கர்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *