ஆஹா எனக்கு விவாகரத்து கிடைத்துவிட்டது …! கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை…!

நடிகை ராக்கி சாவந்த் விவாகரத்து கிடைத்த மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. சுயம் வரம் நிகழ்ச்சியை நடத்தி பரபரப்பை கிளப்பினார். பாலிவுட்டில் பிரபல சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் ராக்கி சாவந்த். இவர் சல்மான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார்.இவர் தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த கம்பீரம் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். நடிகை ராக்கி சாவந்த் பாலிவுட்டில் சிக்காத சர்ச்சைகளே இல்லை என கூறலாம்.

குறிப்பாக கடந்த 2008 ஆம் ஆண்டு தனக்கான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க சுயம் வரம் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அந்நிகழ்ச்சியின் மூலம் வெளிநாட்டைச் சேர்ந்த ரித்தேஷ் என்கிற தொழிலதிபரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்டார். 2 ஆம் திருமணம் சில ஆண்டுகளில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதையடுத்து ஆதில் கான் என்பவரை 2ம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணமானதும் அவர் தனக்கு துபாயில் வீடு வாங்கி கொடுத்துள்ளதாக கூறிய அவர், அவருக்காக இஸ்லாம் மதத்திற்கு மாறியதோடு தனது பெயரை பாத்திமா என மாற்றிக்கொண்டார்.திருமணமான ஒரே மாதத்தில் ஆதில் கான் தன்னை அடித்து துன்புறுத்துவதாக பரபரப்பு புகார் ஒன்றை மும்பை காவல் நிலையத்தில் அளித்தார். இவரின் புகாரின் போரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆதில் கானை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர்.

விவாகரத்தை கொண்டாட பார்ட்டி வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நீதிமன்றம் அவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. விவாகரத்து கிடைத்த மகிழ்ச்சியில் நடிகை ராக்கி சாவந்த் பிரேக் அப் பார்ட்டி ஒன்றை வைத்து கொண்டாடினார். தனக்கு விவாகரத்து கிடைத்ததால் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறி குத்தாட்டம் போட்டதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *