அவரை தான் லவ் பண்றேன், கல்யாணம் பண்ணிக்கனும்…! சீக்ரெட் உடைத்த டிடி…! மறுமணம் பற்றி முதல் முறையாக மனம் திறந்த டிடி என்ன சொன்னார் தெரியுமா…?

தொகுப்பாளினி டிடி தான் யாரை விரும்புகிறேன் என்பது குறித்து மனம் திறந்துள்ளார். திவ்யதர்ஷினி விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக உள்ளார்.சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வரக்கூடியவர் திவ்யதர்ஷினி. இவருக்கும் உதவி இயக்குநரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால், திருமணமான ஒரு வருடத்திலேயே இருவரும் பிரிந்தனர். விவாகரத்துக்கு என்ன காரணம் என்பது பற்றியும் இனி மறுமணம் செய்து கொள்வேனா என்பது பற்றியும் டிடி மனம் திறந்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சி இவரை இன்னும் பிரபலமாக்கியது.

தற்போது வாரநிகழ்ச்சிகளையும் முக்கிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றார். தான் தொகுப்பாளினியாக மட்டும் அல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.அதன் வரிசையில், அதர்வா நடித்துள்ள படமான மத்தகன் திரைபடத்தில் டிடி நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 18ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. அதற்கான புரோமஷன் நிகழ்ச்சி பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்ட டிடி சிறிய கேம் விளையாடினார்.அதில் தான் ஹிருத்திக் ரோஷனை அதிகம் விரும்புவதாகவும், ஏ.ஆர் ரஹ்மானை அடுத்த ஜென்மத்தில் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் குறித்து எனது எண்ணம் வேறு விதமாக இருந்தது. ஆனால், இப்போது நான் நினைப்பது வேறு. திருமணம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம். சமயங்களில் திருமணமான இருவருக்குள் புரிதல் இல்லாமல் இருக்கலாம். கருத்து வேறுபாடுகள் வரலாம். அதை தாண்டி அவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள்என்பதுதான் முக்கியம். நான் இப்போது தனிமையில்தான் இருக்கிறேன். என் நலன் குறித்து எனது குடும்பம் யோசித்து வருகிறது. மறுமணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை” எனப் பேசியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *