90, 80 களில் கவர்ச்சி நடிகையாக நடித்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஷகீலா.நடிகை ஷகீலா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த மிகவும் மோசமான சம்பவம் குறித்து, யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது மட்டுமின்றி, அனைத்து துறையிலும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருப்பதாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இவருக்கு எதிராக பல்வேறு சதி நடக்க, இனி மலையாளத்தில் நான் நடிக்கவே மாட்டேன் என வாங்கிய அட்வான்ஸ் தொகை அனைதையும் திடீர் என திருப்பி கொடுத்தார். இந்த சம்பவத்திற்கு பின்னர் இவருக்கான மார்க்கெட் சரிந்தது. அவ்வப்போது சில கவர்ச்சி வேடங்களில் தமிழ் படங்களில் தலை கட்டி வந்த ஷகிலாவுக்கு ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சி குக் வித் கோமாளி சீசன் 2ல் பங்கேற்று அனைத்து தரப்பு மக்கள் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது ஷகீலா சின்னத்திரை, வெள்ளித்திரை படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷகீலா தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அதில் அவர, என்னுடைய அம்மா உடல்நலக்குறைவால் இருந்தார். நான் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அப்போது மருத்துவர் எழுதிய எழுத்துக்கள் சரியாக புரியாததால் அதுபற்றி அவரிடம் கேட்டேன்.
திடீர் என, என் பக்கத்தில் வந்த மருத்துவர் தொடரக்கூடாது இடத்தில் தொட்டார். இதனால் கோபம் அடைந்து மருத்துவரை அறைந்தது மோசமாக திட்டிவிட்டேன் என்று ஷகீலா கூறியுள்ளார். அந்த மருத்துவரின் செயலால் உச்சகட்ட கோபமடைந்த ஷகீலா எதை பற்றியும் யோசிக்காமல் அந்த மருத்துவரை அறைந்ததோடு, பயங்கரமாக திட்டி அடி வெளுத்து வாங்கியுள்ளார். அவரின் சத்தத்தை கேட்டு வெளியே இருந்த செவிலியர் உள்ளே வந்து, ஷகீலாவை சமாதானம் செய்து அனுப்பினாராம். இந்த சம்பவத்தை கூறி, அணைத்து துறையிலும்… அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் உள்ளது என தெரிவித்துள்ளார் நடிகை ஷகீலா.