அதை சொல்லி எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை…! பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா ஓப்பன்…!

சினிமாவில் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்க திறமையை மட்டும் பார்க்காமல் அழகு மற்றும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்வதை வைத்து தான் வழங்கப்படுகிறது. அதிலும் சிலர் கருப்பாக இருப்பதை வைத்து வாய்ப்பு கொடுக்காமல் ஒதுப்படுவார்கள். அப்படியொரு நிலை தனக்கு வந்ததாக பொன்னியின் செல்வன் பட நடிகை ஓப்பனாக பகிர்ந்துள்ளார்.இந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த நடிகை சோபிதா, பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இதற்கிடையில் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நடிகர் நாக சைதன்யாவுடன் காதலில் இருப்பதாகவும் செய்திகள் கசிந்தது.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு தேடும் போது நான் வெள்ளையாகவும் அழகாகவும் இல்லை என்று கூறி வாய்ப்பு கொடுக்கவில்லை. தனால் நான் சோர்வடையாமல் கிடைத்த சிறு ரோலில் நடித்து என் முழு திறமையை காட்டினேன். அந்த சிறு ரோல் தான் நிறைய எனக்கு கற்றுக்கொடுத்தன என்று கூறியுள்ளார்.

மேலும் நாக சைதன்யாவுடன் ரிலேஷன்ஷிப் பற்றிய கேள்விக்கு, சொந்த வாழ்க்கை குறித்து வதந்திகள் வந்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அதையெல்லாம் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் வருங்கால கணவர் குறித்து சில ஆசைகள் இருக்கிறது.அவர் வாழ்க்கையில் உயரத்துக்கு சென்றாலும் அடக்கமானவராகவும் நல்ல குணமுடையவராகவும் இருக்க வேண்டும் என்று சோபிதா பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *