தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சங்கர், இந்தியன் 2, கேம் சேஞ்சர் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கி வருகிறார். சினிமா ஒரு புறம் இருக்க அவரது இருமகள்கள் வாழ்க்கையை நினைத்து நிம்மதி இல்லாத நிலைக்கு இருந்து வருகிறார்.முதல் மகள் ஐஸ்வர்யா திருமணமாகி 6 மாதத்தில் மருமகன் கைது செய்யப்பட்டதால் விவாகரத்து வரை சென்றுள்ளார். அதை தொடர்ந்து டாக்டர் படிப்பை படிக்க வைத்த அதிதியை, பெரிய டாக்டராக்கி வெளிநாட்டில் செட்டிலாக்க வேண்டும் என்ற பெரிய ஆசைஅயி வைத்திருக்கிறார் சங்கர்.
ஆனால், அதைவிட்டுவிட்டு சினிமா பக்கம் சென்றார் அதிதி. மகளின் ஆசைக்காக ஒருசில படங்களில் நடிக்க வைக்கலாம் என்று நினைத்திருந்த அப்பாவுக்கே தெரியாமல் பல படங்களில் கமிட்டாகியிருக்கிறார் அதிதி சங்கர்.இதெல்லாம் பிடிக்காத சங்கர், எப்படியாவது கைமீறி போன மகளின் ஆட்டத்தை நிறுத்த ஒரு விசயத்தை செய்யவிருக்கிறாராம். அவரது குடும்பத்திற்கு அதிதி நடிப்பது பிடிக்கவில்லை என்பதால் விரைவில்
ஒரு பெரிய இடத்து வரனை பார்த்து செட்டிலாக்க முடிவு செய்திருக்கிறாராம் இயக்குனர் சங்கர்.இரு ஆண்டுகளில் எத்தனை படம் நடிக்க முடியுமோ நடித்துக்கொள் என்றும் இரண்டு ஆண்டுக்கு பின் நிச்சயம், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கண்டீசனை கூறியிருக்கிறார். அதனால் தான் அதிதி சங்கர் நடிச்சு முடிச்சு வெளியான ரெண்டு படத்திற்குள் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.