ஷேவ் தான் பண்ணுவேன்…! ரெண்டு நாளைக்கு ஒரு தடவ…! இது தான் காரணம்…! கூச்சம் இல்லாமல் கூறிய ரேஷ்மா பிரசாத்…!

சின்னத்திரைகளும் சரி, பெரிய திரைகளும் சரி நடிகைகளுக்கு இருக்கக்கூடிய மவுஸ் என்றுமே குறைந்ததாகத் தெரியவில்லை. அந்த வகையில் சீரியலில் சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடம் பிடித்து இருக்கும் சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத் பற்றி உங்களிடம் அதிகளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. கேரளாவில் பிறந்து வளர்ந்த ரேஷ்மா பிரசாத் பட்டப்படிப்பை முடித்தவர். இவர் நேக் அவுட் யூடியூப் சேனலில் தோன்றியதன் மூலம் புகழ் அடைந்தார். இவர் ஆரம்ப காலத்தில் யூடியூபராக தனது வாழ்க்கையை துவங்கியவர். மேலும் நடிகை ரேஷ்மா பிரசாத் சின்னத்திரையில் வெளி வந்த பாரதி கண்ணம்மா 2 சீரியலில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து அண்மையில் இவர் தந்த பேட்டி ஒன்றில் மிகப்பெரிய சலசலப்பு இணையத்தில் ஏற்பட்டு விட்டது.இதற்கு காரணம் சினிமா மற்றும் சின்னத்திரைகளில் அரங்கேறி வரும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய பல விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கும் இவர் தற்போது சின்ன திரையிலும் மீடூ புகார் கொடுக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக கருத்துக்களை தெரிவித்தார். பாரதி கண்ணம்மா 2 சீரியலில் மது என்கின்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து வரும் இவரிடம் சிலர் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண ஓகே வான்னு நேரடியாகவே

தன்னிடம் கேட்டதாக கூறிய விஷயம் தான் பலர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதனை அடுத்து இப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் நடிக்க வேண்டும் என்றால் எனக்கு அந்த நடிப்பை வேண்டாம். அந்த ரோலும் வேண்டாம் வரும் போது வரட்டும் என்று ஆடிஷன் போவதையே நிறுத்திவிட்டாராம். எனினும் பாரதி கண்ணம்மா இரண்டில் நேர்த்தியான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருக்கும் இவர் இல்லத்தரசிகள் விரும்பும் நடிகையாகவும் திகழ்கிறார். இந்நிலையில் ஒரு நடிகை தினமும் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பேசுகையில்,

நடிகை ரேஷ்மா பிரசாத் தினமும் கால்களை சேவ் செய்வது முக்கியமானது என்ற கருத்தை கூறியிருக்கிறார். அத்தோடு இவர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் கால்களில் இருக்கும் ரோமங்களை நீக்க சேவிங் செய்வேன் என்று கூறியதோடு வேக்சிங் அல்லது லேசர் முறையில் தான் தேவையில்லாத ரோமங்களை கால் மற்றும் மற்ற பகுதிகளில் இருந்து நீக்க முற்படுவார்கள்.ஆனால் என்னிடம் அந்த அளவுக்கு வசதி இல்லை என்பதால் இப்போது வரைக்கும் இரண்டு நாளுக்கு ஒரு முறை சேவிங் செய்து கொண்டிருக்கிறேன் என்று பிரபல சினிமா நடிகை ரேஷ்மா பிரசாத் கூறியிருக்கிறார்.

மேலும் நான் இருக்கக்கூடிய துறை, சினிமா துறையைச் சார்ந்தது என்பதால் இதை கண்டிப்பாக செய்து தான் ஆக வேண்டும். இதையுமே செய்யக்கூடாது என்று தான் கூறியிருக்கிறார்கள். எனினும் என்ன செய்வது இந்த துறையில் இருப்பதால் கட்டாயம் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் கூறிய விஷயமானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு சினிமா துறையில் நடிப்பவர்களுக்கு இது போன்ற விஷயங்களை அவசியமாக செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதை ரசிகர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *