சின்னத்திரை சீரியல் நடிகைகள் சமீபகாலமாக சீரியல்களில் நடக்கும் பிரச்சனைகளை குறித்து பேசி வருகிறார்கள். அப்படி நடிகை ப்ரீத்தி சர்மா தான் நடிக்கும் சீரியல்களில் லிப்லாக் காட்சிகள் வரம்பு மீறுவதாக கூறியிருக்கிறார்.குழந்தைகள் பார்க்கும் சீரியல்களில் லிப்லாக் காட்சிகள் சமீபகாலமாக இடம்பெற்று வருகிறது. இயக்குனர்களிடம் இதுபற்றி கூறி இது அவசியமா என்றும் தவிர்க்கவும் பார்ப்போம்.சினிமா நடிகைகளை போலவே சீரியல் நடிகைகளும் ரசிகர்களிடம் பிரபலமாகும் காலம் இது. அதற்கு காரணம் சமூகவலைத்தளங்கள்தான். சீரியலில் நடித்தாலும் அவரின் நோக்கம் எப்படியாவது சினிமாவிற்குள் நுழைய வேண்டும் என்பதுதான்.
திருமணம் என்கிற சீரியலில்தான் முதலில் நடித்தார். அதன்பின் சித்தி 2, பூவே உனக்காக என சில சீரியல்களில் நடித்தார். சில தெலுங்கு சீரியல்களிலும் நடித்தார். ப்ரீத்தி ஷர்மா விதவிதமான உடைகளில் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். கருப்பு நிற டி-சர்ட்டை அணிந்து க்யூட்டாக போஸ் கொடுத்திருக்கிறார்.அழகிய ஆரஞ்சு நிற சுடிதார் மற்றும் லெஹங்கா போட்டு ரசிக்க வைக்கிறார். புகைப்படங்கள் மட்டுமில்லாமல் அடிக்கடி ரீல்ஸ்
வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். ஆனால், தனிப்பட்ட சினிமா வாழ்க்கைக்காகவும் கேரியருக்காகவும் இதையெல்லாம் சகித்துக்கொண்டு இயக்குனர்கள் சொல்வதை செய்தாகவேண்டும்.லிப்லாக்கில் நடிப்பதை மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால், ஷூட்டிங்கில் படபடப்பாகவும் கூச்சமாகவும் வெட்கமாகவும் தான் இருக்கும். எல்லாம் தாண்டி அந்த காட்சியில் நடித்து கொடுப்போம் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் ப்ரீத்தி சர்மா.