வீட்டை விட்டு வெளியவே வரமுடியாது…! அவ்வளவு மோசமாக பேசுவாங்க…! சோகத்தை பகிர்ந்த நடிகை சமீரா…!

நடிகை சமீரா தனது வாழ்க்கையில் நடந்த மோசமான நிகழ்வுகள் குறித்து கூறியுள்ளார்.நடிகை சமீரா ரெட்டி, தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில், உடல் எடை அதிகரிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த, தினமும் ஒரு இட்லி சாப்பிட்டதை நினைவு கூர்ந்துள்ளார். ஒரு புதிய நேர்காணலில், சமீரா தன்னை ‘ஒரு பூப் வேலையைச் செய்யுமாறு’ கேட்கப்பட்டதையும் வெளிப்படுத்தினார். பிரசவத்திற்குப் பிறகு ‘மிக மோசமான, இருண்ட இடத்திற்கு நழுவுவது’ பற்றியும் நடிகர் பேசினார். பிரபல நடிகை சமீரா ரெட்டி ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட மும்பையில் வளர்ந்த பெண். இவருக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இருந்ததால், மாடலிங்கில் நுழைந்தார்.

பாலிவுட் படங்களில் வாய்ப்பு கிடைத்து தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் சூர்யா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இவரது நடிப்பால் பல ரசிகர் மனதில் இடம்பிடித்தார். இதனை தொடர்ந்து அசல், வெடி, வேட்டை உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். சோகத்தை கூறிய நடிகை இந்நிலையில், அவர் தனது வாழ்க்கையில் நடந்த சில கஷ்டமான விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

அதில், “முதல் குழந்தை பிறந்த பிறகு தான் அதிகம் குண்டாக இருந்தேன் அதை பார்த்து பலரும் விமர்சித்தார்கள். காய்கறி விற்பவர் கூட மோசமாக பேசி இருக்கிறார்.நான் வீட்டை விட்டு வெளியில் கூட வரமாட்டேன், பத்ரிகையாளார்கள் போட்டோ எடுக்க விடவே மாட்டேன். அந்த அளவுக்கு இந்த சமூகம் எனக்கு ஒரு மோசமான அனுபவத்தை கொடுத்தது” என்று கூறியுள்ளார். தற்போது அவர் தனது 44 வயதில் மீண்டும் நடிக்க வருவதற்காக கதைகள் கேட்க தொடங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *