முன்னணி இயக்குனருடன் பிரியங்கா மோகன்…! பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்…! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

நடிகை பிரியங்கா மோகன் குறித்து பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.தெலுங்கில் நடிகர் நானிக்கு ஜோடியாக கேங்லீடர், படத்தின் மூலம் அறிமுகமானவர். நடிகை பிரியங்கா அருள் மோகன். முதல் படத்திலேயே தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.பார்ப்பதற்கு பக்கத்துக்கு விட்டு பெண் போல் இருக்கும் இவரின் எதார்த்தமான அழகு, தமிழ் சினிமாவிலும் இவருக்கு வாய்ப்பை பெற்று கொடுத்தது. அந்த வகையில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். தமிழில் தான் டாக்டர் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன்.

விரல் விட்டு எண்ணும் அளவிலான திரைப்படங்களில் தான் நடித்துள்ளார் என்றாலும் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக அறியப்படுகிறார். மட்டுமில்லாமல் மாடல் அழகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் இவர் விளம்பரங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களிலும் தலைகாட்டி வருகிறார். இந்நிலையில் ரங்கநாதன் பிரியங்கா மோகன் குறித்து ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார்.அதில் அவர் கூறியதாவது, பிரபல நடிகர் நெல்சன் திலீப் குமாருடன் நடிகை பிரியங்கா மோகன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார் .

அவர் வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் இவரும் அவருடனே சென்று விடுகிறார்.தற்போது தன்னுடைய குடும்பத்தினருடன் நெல்சன் வெளிநாட்டுக்கு சென்று இருக்கிறார். அப்போது குடும்பத்தில் ஒருவராக நடிகை பிரியங்கா மோகனும் சென்றிருக்கிறார். அந்த அளவுக்கு நெல்சன் குடும்பத்தினருடன் பிரியங்கா மோகன் நெருக்கமாக இருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் பதிவிட்டு இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *