மனைவியின் தங்கையுடன் இரண்டாம் திருமணம்…! தந்தையால் சந்தோஷமில்லாத வாழ்க்கை வாழ்ந்த கெளதம் கார்த்திக்…!

தமிழ் சினிமாவில் நவரச நாயகனாக திகழ்ந்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் கார்த்திக். அவருக்கு அடுத்து அவரது மகன் கெளதம் கார்த்திக் கடல் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தன்னுடன் ஜோடிப்போட்டு நடித்த நடிகை மஞ்சுமா மோகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.நடிகர் கார்த்திக் 1988ல் ராகினி என்பவரை திருமணம் செய்து கெளதம் கார்த்திக் மற்றும் இன்னொரு மகனை பெற்றெடுத்தார். அதன்பின் 4 ஆண்டுகள் கழித்து முதல்

மனைவியின் தங் கை ராகினியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டு ஒரு மகனை பெற்றெடுத்தனர். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தந்தை இரண்டாம் திருமணம் செய்தது குறித்து பல விசயங்களை பகிர்ந்துள்ளார். என் அப்பா இரண்டாம் திருமணம் செய்து கொண்டதால் என் அம்மாவும் பிரிந்துவிட்டார்கள். நான் தனிமையில் வாடினேன்.அப்பா சென்னையில் இருந்ததால் அம்மாவுடன் தான் மும்பையில் வசித்து வந்தேன் என்றும் இரு வருடத்தில் எப்போதாவது

தன் அப்பாவிடம் இருந்து போன் வரும் எப்போவாவது தான் பார்க்க வருவார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சிங்கிள் மதராக என் அம்மா எங்களை வளர்த்தார், பிரச்சனைகள் வந்தாலும் அதையும் மீறி என்னையும் என் தம்பியையும் வளர்த்து வந்ததாக கெளதம் கார்த்திக் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *