பாத்துமா ஒரு நூலுதான் பிச்சிக்க போகுது…! படுமோசமான உடையில் சகலத்தையும் காட்டிய அனுசுயா…! ஷாக்கான ரசிகர்கள் …!

நடிகர் விஜய் தேவரகொண்டா தான் தனக்கு எதிராகத் தூண்டி விடுகிறார் எனப் பிரபல நடிகை அனுசுயா பரத்வாஜ் தெரிவித்துள்ளார். பிரபல நடிகையாகத் தெலுங்கு சினிமாவில் வலம் வருபவர் அனுசுயா பரத்வாஜ். முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகப் பிரபலமடைந்த இவர், பின்னர் திரைப்படங்களில் நடித்து மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார். அல்லு அர்ஜுன் நடித்து வெளியான புஷ்பா திரைப்படத்தில் சுனிலுக்கு ஜோடியாக வித்தியாசமாக நடித்துப் பிரபலமானார்.தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாகி உள்ள விமானம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். தற்போது இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் அளித்த பேட்டியில், நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்களுக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்துப் பேசினார்.அப்போது அவர் கூறுகையில், நானும் விஜய் தேவரகொண்டாவும் நீண்ட காலமாக நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம். சிக்கல்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அர்ஜுன் ரெட்டி திரைப்படம் வெளியான போது திரையரங்குகளுக்கு விஜய் தேவரகொண்டா சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் படத்தில் அவர் பேசிய மோசமான வசனங்கள் திரையரங்குகளில் மியூட் செய்யப்பட்டன.

அப்போது ரசிகர்களிடம் அவர் அந்த வசனத்தைப் பேசுமாறு சொன்னதும், அந்த வசனத்தை அவர்கள் சத்தமாகக் கத்தினர். இந்த சம்பவம் ஒரு தாயாக எனக்கு வேதனையைக் கொடுத்தது. உடனே இது குறித்து அவரிடம் நான் பேசினேன். தயவுசெய்து நிஜ வாழ்க்கையில் இது போன்ற வசனங்களை ஊக்குவிக்க வேண்டாம் என அவரிடம் கூறினேன்.அதற்குப் பிறகு விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் என்னைத் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தனர். அதனை அவர் கட்டுப்படுத்தாமல் இருந்தார். மேலும் அவரது குழுவில் முக்கிய நபராக இருக்கக் கூடியவர் எனக்கு எதிராகத் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *