பலர் வாழ்க்கையில் விளையாடிய பிரியங்கா…! காரணத்தை கூறி காட்டமான பதிலடிக் கொடுத்த VJ பாவனா…!

“ தன்னுடைய வாழ்க்கையை பிரியங்கா தான் இல்லாமலாக்கினார்..” என்ற கருத்திற்கு பாவானா தரமான பதிலடிக் கொடுத்துள்ளார்.பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளர்களாக இருக்கும் பிரபலங்களுக்கு இடையில் வெடித்திருக்கும் சண்டை சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அந்த வகையில் நேற்றைய தினம் குக் வித் கோமாளியில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை மற்றும் போட்டியாளராக இருக்கும் VJ பிரியங்கா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக குக் வித் கோமாளி தொகுப்பாளர் மணிமேகலை ஷோவில் இருந்து விலகியுள்ளார்.

தனது வேலையில் பிரியங்கா அதிகம் தலையிடுவதாகவும் மணிமேகலை குற்றச்சாட்டு முன் வைத்திருந்தார்.இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்பு சூப்பர்சிங்கர் ஷோவின் தொகுப்பாளினியாக VJ பாவனா இருந்தார். அவர் ஷோவை விட்டு விலக பிரியங்கா தான் காரணம் என இணையத்தில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.இதற்கு VJ பாவனா ட்விட்டர் பக்கத்தில் காட்டமான பதிலடிக் கொடுத்துள்ளார். அதாவது, “நான் பிரியங்கா பற்றி அப்படி எப்போதும் சொன்னதில்லை.

அப்படி ஒரு வீடியோ இருந்தால் காட்டுங்க. அப்புறம் பேசலாம்.” “நான் சூப்பர்சிங்கர் ஷோவில் இருந்து வெளியேறியதற்கு காரணம் வேறு துறையில் என் கனவை அடைய தான்.நானும் என் கணவரும் மும்பையில் ஒன்றாக இருக்கிறோம். அங்கேயே வேலை செய்ய வேண்டும் என்று எடுத்த முடிவு அது. அவ்வளவுதான்” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் பிரியங்கா பற்றிய தவறான கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *