தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்து வந்தார் நடிகை ஜோதிகா. தற்போது திருமணத்திற்கு பின் நடிக்க ஆரம்பித்து பாலிவுட் வரை சென்றிருக்கிறார். சமீபத்தில் கூட பாலிவுட் படத்திற்காக விஜய்யின் 68வது படத்தை நிராகரித்திருக்கிறார்.மேலும் நடிகை நயன்தாராவின் நடிப்பையும் குறை சொல்ல முடியாத அளவுக்கு தான் இருக்கின்றது.இருந்தாலும் நயன்தாராவை விட சீனியர் நடிகையாகவும் தென் இந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த ஜோதிகாவை இப்படி சொல்லியது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் உள்ளது. ஏனெனில் அந்த அளவுக்கு நடிகை நயன்தாராவின் நடிப்பு இருந்ததாக அந்த ஸ்டார் நடிகர் பாராட்டியுள்ளார்.அவர் வேறு யாரும் இல்லை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
மேலும் சந்திரமுகி படப்பிடிப்பு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் வாசுவிடம் இந்த விஷயத்தை சொல்லி இருக்கின்றார்.மேலும் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாராவுக்கு சந்திரமுகி படம் இரண்டாவது படம் ஆகும்.அதுவும் இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.மேலும் நயன்தாராவின் மலையாள திரைப்படத்தை பார்த்த பிறகுதான் பி. வாசு இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை கொடுத்துள்ளார்.மேலும் இந்த படத்தில் சந்திரமுகி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகா நடித்திருப்பார். இந்நிலையில் இயக்குனர் பி வாசு சமீபத்தில் நயன் தாரா நடிப்பை பார்த்து வியந்து
ஜோதிகாவை அவரை போல் நடிக்க வையுங்கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். என்னதான் சீனியர் நடிகையாக இருந்தாலும் தன்னுடைய இரண்டாவது படத்தில் நயன் தாரா, ஒரு காட்சியில் ரஜினியை வியக்கவைக்கும் நடிப்பை காட்டி மிரள வைத்திருந்தாராம். இதனால் தான் ஜோதிகாவையும் அப்படி நடிக்க வையுங்கள் என்று கூறியிருந்தாராம் ரஜினி. அதனால் தான் தற்போது நயன் தாரா, லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். ஆனால், ஜோதிகா சந்திரமுகியாக தன்னை மிரட்டி விட்டார் என்று ரஜினிகாந்தே மேடையில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.