“நடுரோட்டுல ஃபர்ஸ்ட் நைட்…!”அதற்கு இது தான் காரணம்…! ரகசியம் உடைத்த ஹேமா ராஜ்குமார்…!

பிரபல நடிகை ஹேமா ராஜ்குமார் பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ரசிகர்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை சமீபத்திய பேட்டி ஒன்றிய பகிர்ந்து இருக்கிறார். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஹேமா ராஜ்குமார். அவ்வப்போது பேட்டிகளில் கலந்து கொள்ளும் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவருடைய பழைய புகைப்படங்களை காட்டி அந்த புகைப்படங்கள் எடுக்கும் பொழுது ஏற்பட்ட அனுபவம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முதலிரவு காட்சியில் நடித்திருந்த இவருடைய புகைப்படத்தை காட்டி இந்த காட்சி குறித்து உங்களுடைய அனுபவம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் எனக்கும் என்னுடைய ஜோடிக்குமான முதல் இரவு காட்சி. இதுதான் ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை நான் இப்போது சொல்கிறேன்.இந்த காட்சியை எங்கே பதிவு செய்திருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்..? என்று தொகுப்பாளினியை பார்த்து கேள்வி எழுப்பினார் ஹேமா ராஜ்குமார். அதற்கு தொகுப்பாளனி,.. ஏதேனும் ஒரு ரூமுக்குள் எடுத்திருப்பீர்கள்.. என்று பதில் சொன்னார். ஆனால், இது எந்த ரூமிலும் எடுக்கப்படவில்லை. நடுரோட்டில் இந்த காட்சி படமாக்கப்பட்டது.

அன்றைய தினம் அந்த முதலிரவு காட்சி படமாக்கப்பட வேண்டிய அறையில் வேறொரு படத்தின் வேறு ஒரு காட்சியின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இந்த காட்சி இன்னும் இரண்டு நாட்களில் ஒளிபரப்பாக வேண்டியது. இப்போது விட்டால் இந்த காட்சியை படமாக்குவதற்கு மேலும் இரண்டு நாட்கள் ஆகும் என்பதால் அன்று நடுரோட்டில் படுக்கையரை போன்ற ஒரு செட் அமைத்து இந்த காட்சியை படமாக்கினோம்.அந்த காட்சி படமாக்கப்பட்ட விதம் எனக்கு மறக்க முடியாத அனுபவம் என்ற பதிவு செய்திருக்கிறார் நடிகை ஹேமா ராஜ்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *