தெனாவட்டு காட்டிய நயன்தாரா…! விட்டு விளாசிய விஷால்…! என்ன நடந்தது தெரியுமா…?

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா குறித்து சமீபகாலமாக பொதுவாக ஒரு புகார் வந்து கொண்டிருக்கிறது. அது என்னவென்றால் தான் நடிக்கக்கூடிய படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் நயன்தாரா கலந்து கொள்வது கிடையாது. தயாரிப்பாளர்கள் அழைப்பு விடுத்தாலும் அதனை மறுத்து விடுகிறார் என்பதுதான். அதேநேரம் தன்னுடைய பணத்தில் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்க கூடிய படங்களுக்கு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் மட்டுமில்லாமல் படம் வெளியாக கூடிய திரையரங்குகளுக்கு கூட சென்று ப்ரோமோஷன் செய்கிறார் நடிகை நயன்தாரா.ஆனால் வேறு தயாரிப்பாளரின் படத்தில் நடித்த சம்பளம் வாங்கினோமா..?

நடித்தோமா..? என்று போய்விடுகிறார் என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டு குறித்து நடிகர் சங்க தலைவரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் இடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதில் அளித்த நடிகர் விஷால் அது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். தயாரிப்பாளர்களுக்கு அது கூடுதல் பலமாக இருக்கும். படத்தின் பிரமோஷனுக்கும் அது உதவியாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.படத்தின் பிரமோஷனுக்கு வருவதால் அவருக்கு ஒன்னும் கெட்டுவிட போவது கிடையாது.

இன்னும் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் எதுவும் நடு ரோட்டிலோ அல்லது தெருக்கொடியிலோ நடத்தப்படுவது கிடையாது. நட்சத்திர ஹோட்டல்கள், ஏசி குளிரூட்டப்பட்ட அரங்குகள், நல்ல உணவு, இப்படி எல்லாம் தான் நடத்தப்படுகிறது.ஆனால், அதில் கூட கலந்து கொள்ளாம், என்னென்ன வந்தது என தெனாவெட்டாக இருப்பது.. கலந்து கொள்ள முடியாது என இருப்பது.. என்று இருக்கும் நடிகைகள் பற்றி ஒரு தயாரிப்பாளராக நான் வேதனைப்படுகிறேன் என்று நடிகை நயன்தாராவை மறைமுகமாக விலாசி இருக்கிறார் விஷால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *