திருமணம் செய்து குழந்தைகள் பெத்துக்கணும் ஆசையா இருக்கு…! அமைச்சர் ஜீவன் குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்…!

தமிழ் சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் பெரும்பாலும் ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இலங்கை நுவரெலியா மாவட்டத்தில் பிரமாண்டமாக பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சம்யுக்தா மற்றும் ஐஸ்வர்யாதத்தா உள்ளிட்ட சினிமா பிரபலங்களை அமைச்சர் ஜீவன் அழைத்து இருந்தார்.இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், அமைச்சர் ஜீவன் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், “நான் நினைத்தது போல பொங்கல் கொண்டாட்டம் சிறப்பாக இருந்தது. அமர்ச்சர் என்று சொன்னவுடன், அவர் வயதான நபராக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கு வயது மிகவும் குறைவு. ரொம்ப அழகாகா இருக்கிறார். முதல் முறையாக குறைவான வயதில் ஒருவர் அமைச்சர் ஆகி இருக்கிறார்”

“அமைச்சர் ஜீவன் பல நல்ல விஷயங்களை செய்து வருவதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். இதனால் மக்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருப்பதாக நான் நினைக்கிறேன். மேலும் அவர் பேசுகையில் எனக்கு திருமணம் செய்து கொண்டு பிள்ளைகள் பெத்துக்கணும் என்ற ஆசை இருக்கிறது” என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *