தியேட்டரில் இருக்கும் போது அந்த இடத்தில் கை வைத்து கசக்கினார்கள்…! பகிர் தகவலை வெளியிட்ட தனுஷ் பட நடிகை…!

2007 -ம் ஆண்டு வெளியான சாவரியா என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாணவர் தான் சோனம் கபூர். இவர் தனுஷின் முதல் இந்தி படமான அம்பிகாபதி படத்திலும் ஹீரோயினாக நடித்து தென்னிந்திய ரசிகர்கள் மனதில் பிரபலமானார்.பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் தான் சோனம் கபூர். சோனம் கபூர் முன்னணி நடிகையாக இருந்த போதே, கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை, திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து சில பாலிவுட் படங்களில் நடித்து வந்த சோனம் கபூர், கடந்த மார்ச் மாதம் தான் கர்ப்பமாக உள்ளதாக ரசிகர்களுக்கு கூறினார்.

தனுஷ் முதன் முதலாக இந்தியில் நடித்திருந்த படம், ராஞ்சனா. இந்த படம், தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியாகியிருந்தது. நடிகை சோனம் கபூர், ராஞ்சனா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருந்த ப்ளாக் என்ற படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து தனது திரை வாழ்க்கையை தொடங்கினார், சோனம் கபூர். அனைத்து ஸ்டார் கிட்ஸ்களுக்கும் இருப்பது போன்று இவருக்கும் பெரிய ரசிகர் படை உள்ளது. பெரும்பாலும் வருடத்திற்கு ஒரு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார், சோனம்.  இதுவரை ரன்பீர் கபூர், அபிஷேக் பச்சன், அக்ஷய் குமார், ஆயுஷ்மான் குரானா என பாலிவுட்டின்

முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்துவிட்டார். இவர், தனது சிறுவயதில் நேர்ந்த கொடுமையான ஒரு விஷயம் குறித்து பேசியுள்ளார். சோனம் கபூர் சமீபத்தில் சில திரை பிரபலங்கள் பங்கேற்ற விவாத நிகழ்ச்சியில் (Round Table Conference) கலந்து கொண்டார். அப்பாேது பல விஷயங்கள் குறித்து கலந்துரையாடிய பிறகு, பெண்கள் அடிக்கடி சந்திக்கும் பாலியல் வன்முறைகள் மற்றும் சீண்டல்கள் குறித்து சோனம் கபூர் பேசினார். சிறுவயதில், பலர் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக கூறிய  அவர், தானும் 13 வயதில் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக கூறினார்.

சோனம் கபூர் தான் பங்குபெற்ற நிகழ்ச்சியில் தனக்கு சிறுவயதில் நடந்த சம்பவம் குறித்து பேசினார். அவருக்கு 13 வயது இருக்கும் போது நண்பர்களுடன் மும்பையில் உள்ள ஒரு பிரபலமான திரையரங்கிற்கு சென்றுள்ளார். அப்போது பின்னாள் இருந்த வந்த ஒருவர், சோனம் கபூரின் மார்பகத்தில் கையை வைத்துவிட்டு சென்றாராம். இதையடுத்து, தான் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நின்றதாக கூறினார், சோனம் கபூர். அந்த நாள் முழுவதும் அதிகமாக அழுததாதகவும் தன் மீதுதான் தப்பு என கருதி வெகு நாட்களாக இந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறவில்லை என்று சோனம் கபூர் தெரிவித்தார.

இதை நினைவு கூர்ந்த சோனம் கபூர், இது போல பலர் தங்களது சிறுவயதில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாக கூறியுள்ளார். இளம் வயதிலேயே பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவோருக்கு அது மறக்க முடியாத, ஆறாத வடுவாக மனதில் பதிந்து விடும் என சோனம் கபூர் அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.  மேலும், தனக்கு இந்த கொடுமை நேர்ந்த போது அந்த இடத்திலேயே அழுதுவிட்டதாகவும் தனது கை-கால்கள் நடுங்கியதாகவும் கூறினார். மேலும், இதை பற்றி இரண்டு, மூன்று வருடங்களுக்கு யாரிடத்திலும் தன்னால் பேச முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல நடிகையாக வலம் வந்த இவர் சமீப காலமாக படங்கள் பெரிதளவில் ஓடாத நிலையில், சிறு சிறு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சோனம் கபூர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நான் 13 வயதில் இருக்கும் போது தியேட்டருக்கு நண்பர்களுடன் சென்று இருந்தேன். நான் அங்கு இருந்து வெளியே செல்லும் போது ஒரு நபர் என் மார்பின் மீது கை வைத்து விட்டு ஓடிவிட்டார். அப்போது நான் என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டு இருந்தேன் என்று சோனம் கபூர் வேதனையை பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *