தமிழர்கள் எல்லாத்துக்கும் பிச்சை தான் எடுப்பார்கள், ரஜினி பட நடிகையின் திமிர் பேச்சு…! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

தமிழ் சினிமா எத்தனையோ நடிகைகளை வாழ வைத்துள்ளது. அவர்கள் அனைவரும் தமிழ் சினிமாவிற்கு நன்றியுடன் தான் இருந்து வருகின்றனர்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான ரோல்களில் நடித்து வந்தவர் தன்யா பாலகிருஷ்ணன். கடந்த 2011ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான 7ம் அறிவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து நல்ல அங்கீகாரம் பெற்றார். தெலுங்கில் நாயகியாகவே நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்க அங்கு படங்கள் நிறைய நடித்து வருகிறார்.

ஆனால் கொரோனாவிற்கு பிறகு தன்யாவை படங்கள் பக்கம் காண முடியவில்லை.  இந்த நேரத்தில் தான் தெலுங்கு சினிமா நடிகை கல்பிகா தனது யூடியூப் பக்கத்தில், நடிகை தன்யாவிற்கு இந்த வருடம் ஜனவரி மாதம் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாலாஜி மோகனுடன் ரகசிய திருமணம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ள செய்தி ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சமீபத்தில் ஒரு நடிகை குறித்து மிகப்பெரிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. ரஜினி நடிப்பில் அடுத்த வாரம் வரவிருக்கும் படம் லால் சலாம்.

இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் தான்யா நடித்துள்ளார். இவர் சில வருடங்களுக்கு முன்பு மிகவும் சர்ச்சையான கருத்து ஒன்றை பேசியுள்ளார். இதில் இவர் RCB கிரிக்கெட் க்ளபிற்கு சப்போர்ட் செய்வதற்காக தமிழர்கள் தண்ணிக்கும் பிச்சை எடுக்கிறார்கள், இப்போது IPL-லும் என்பது போல் டுவிட் செய்தார். தற்போது அடுத்த வாரம் படம் ரிலிஸாகும் நேரத்தில் இந்த டுவிட் வைரலாகி கடும் எதிர்பபு அவர் மீது எழுந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *