செயற்கையாக மீன்களை எப்படி குஞ்சு போட வைக்குறாங்க பாருங்க…. இதுக்கு முன்னாடி இப்படி ஒரு சம்பவம் பார்த்துருக்கவே மாட்டீங்க…!!

பொதுவாக கோழி, ஆடு, மாடு என வளர்ப்பவர்கள் பலரைப் பார்த்திருப்போம். ஆனால் மீன் அனைவரும் வளர்க்க முடியாது. காரணம், கோழி, ஆடு, மாடு எல்லாம் வீட்டுப் புழக்கடையில் இடம் இருந்தாலே வளர்த்து விடலாம். ஆனால் மீன் அப்படி அல்ல. அது தண்ணீரில் வாழும் உயிரி என்பதால் மீன் வளர்க்க விரும்புபவர்கள் முதலில் அதற்கு ஏற்றதுபோல் குளம் வெட்ட வேண்டும்.

அதிலும் கடலிலோ, ஆற்றிலோ வரும் எல்லா மீன்களையும் வளர்த்துவிட முடியாது. நம் அரசாங்கமே நம் இந்தியாவுக்கு ஏற்ற வாழ் சூழலாக கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை, வெள்ளிக் கெண்டை, புல் கெண்டை ரக மீன்களை அறிவித்துள்ளது. இங்கேயும் அப்படித்தான் ஒருவர் கட்லா ரக மீன்களைத் தன் பண்ணையில் வளர்த்து வருகிறார். நாம் பொதுவாக மீன்கள் ஒன்றுடன் ஒன்று கூடி, மகிழ்ந்து அதன் மூலம் குஞ்சுகள் பொறிப்பதைத் தான் பார்த்திருப்போம்.

ஆனால் இந்தப் பண்ணையில் பெண் மீனின் வயிற்றைப் பிழிந்து கரு முட்டைகளை வெளியே எடுக்கின்றனர். தொடர்ந்து அந்த மீனை மீண்டும் தண்ணீரில் விட்டு,விட்டு தொடர்ந்து ஒரு ஆண் மீனைப் பிடித்து அதன் விந்துவை எடுக்கின்றனர். இரண்டையும் ஒரே பாத்திரத்தில் சேர்த்துவிட்டு, அதனோடு கொஞ்சம் தண்ணீரும் கலந்து, நன்றாக கலக்கிவிடுகின்றனர். தொடர்ந்து இந்தக் கலவையை நன்கு இறுக மூடிய ஒரு குடுவையில் வைத்து, இரு நாள்களுக்குப் பின்பு திறந்தால் அதில் மீன் குஞ்சுகளாக இருக்கின்றன. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள். இதற்கு முன்பு நீங்கள் இப்படி ஒரு காட்சியைப் பார்த்திருக்கவே மாட்டீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *