சிறுநீர் கழிக்கும் போது இயக்குனர் கேட்ட கேள்வி…! வேதனை பகிர்ந்த பூவே உனக்காக ராதிகா பிரீத்தி…!

பிரபல சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி பூவே உனக்காக என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்தார். கிட்டத்தட்ட 460 எபிசோடுகள் அந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்தார். திடீரென அந்த சீரியலில் இருந்து விலகினார். இவர் விளங்கியபோது அந்த சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த அஸீம் தான் இதற்கு காரணம் என்றும் ராதிகா பிரித்துக்கும் அஸீமுக்கும் சண்டை என்பதால் விலகிவிட்டார் என்றெல்லாம் கதைகள் உலா வந்தன. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ராதிகா பிரித்திடம் எதனால் நீங்கள் இந்த சீரியலில் இருந்து விலகினீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதில் அளித்தவர் எனக்கும் அஸீமுக்கும் சண்டை என்ற செய்தி வருகிறது.

எனக்கும் அஸீமுககும் சண்டை நடக்கும். ஆனால் நண்பர்களுக்குள் என்ன சண்டை நடக்கும் அதுதான் நடக்கும். எந்த பிரச்சினையும் கிடையாது. நிஜமான பிரச்சனை எனக்கும் தயாரிப்பு குழுவுக்கும் தான். கிட்டத்தட்ட ஒன்றை ஆண்டுகள் எனக்கு சம்பளமே கொடுக்காமல் நடிக்க வைத்தார்கள். அந்த சீரியல் ஒளிபரப்பான பிறகு தான் நமக்கு பணம் வரும் அதுவரை காத்திருக்க வேண்டும் என்று கூறினார்கள். அவ்வப்போது 10,000 – 20,000 என்று கொடுப்பார்கள். அதெல்லாம் தாண்டி படப்பிடிப்பு தளத்தில் எனக்கு நேர்ந்த அசவுகரிங்கள் தான் இதற்கு காரணம்.படப்பிடிப்புக்கு

ஒரு ஃபார்ச்சூனர் காரில் 10 பேரை ஏற்றிக்கொண்டு போவார்கள். சில நாட்களில் 07:30 மணிக்கு ஷூட்டிங் இருக்கிறது என்று கூறி வர சொல்லுவார்கள். சரி என்று போனால் அங்கே கேட்டை திறப்பது நாமாகத்தான் இருக்கும். நிறைய நாள் நான் சென்று கேட்டை திறந்து இருக்கிறேன். உள்ளே சென்றால் மின்சாரம் இருக்காது. பேன் இருக்காது. எதுவுமே இருக்காது. அந்த இடத்தில் நாம் என்ன செய்ய முடியும்.சரி படப்பிடிப்பின் போது சிறுநீர் கழிக்கலாம் என்றால் ஆண்கள் பெண்கள் என இருவருக்கும் ஒரே கழிவறை தான்.

இதிலும் கொடுமை என்னவென்றால் சிறுநீர் கழிக்க செல்லும் பொழுது பள்ளி குழந்தைகள் இயக்குனரிடம் அனுமதி வாங்க வேண்டும். சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறினால் எவ்வளவு நேரம் ஆகும் என்று மைக்கில் அனைவரும் காது படும்படி கேட்பார். இது போன்ற தர்ம சங்கடமான சூழ்நிலைகள் எல்லாம் நான் அனுபவித்திருக்கிறேன்.அதன் பிறகு எனக்கு சம்பளம் கொடுக்காதது தான் இது இந்த சீரியலில் இருந்து நான் விளங்கிக் கொள்ள மிக முக்கியமான காரணமாக இருந்தது. மட்டுமல்லாமல் சீரியலில் என்னுடன் நடித்த சில நடிகர்கள்

என்னைப் பற்றி புறணி பேசினார்கள். சம்பளம் இன்னும் கொடுக்கவில்லையே என்று என்னுடைய வேதனையை அவர்களிடம் பகிர்ந்து கொண்டால்.. நீ சூட்டிங் வராமல் வீட்டிலேயே இருந்து கொள்.. அப்போதுதான் அவர்கள் பணம் தருவார்கள் என்று கூறினார்கள். அப்படி இருக்கவும் நான் முயற்சி செய்தேன்.. சில நாட்கள் இருந்திருக்கிறேன். ஆனால் என்னிடம் அப்படி கூறிவிட்டு இயக்குனரிடம் வந்து நீங்கள் சம்பளம் தராததால் தான்

இவர் வரவில்லை போலிருக்கிறது என்ன பொண்ணு இவ.. எப்படி இண்டஸ்ட்ரியில் சர்வைவ் பண்ணுவா..? என்று என்னைப் பற்றி படக்குழுவிடம் போட்டு கொடுத்து கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் எனக்கு இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் தெரியவந்தது. எனக்கு ஒரு நல்ல ஒரு பணி சூழல் அந்த இடத்தில் அமையவில்லை. அதனால் நான் அந்த சீரியலில் இருந்து விலகி விட்டேன் என பதிவு செய்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *