நடிகை ஷகீலா கர்ப்பமாக இருந்தது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். ஷகீலா மலையாள திரையுலகில் பிரபலமாக இருந்தவர் நடிகை ஷகீலா. இவர் கவர்ச்சி காட்டி பல பலான படங்களில் நடித்துள்ளார், 90ஸ் களில் பலருக்கு பிடித்தமான கவர்ச்சி நடிகை. ஷகிலாவுக்கு மலையாளத் திரையுலகம் தடை விதித்ததால் அவர் தமிழில் எண்டரி கொடுத்தார். பின்னர் கிளாமர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஷகிலா, தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.பின்னர் இவர் வெகு நாட்கள் கழித்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளியில் கலந்துகொண்டார். அதன்மூலம் மக்களுக்கு இவர் மீது இருந்த அபிப்ராயம் மாறியது. தற்பொழுது தெலுங்கும் பிக் பாஸில் கலந்துகொண்டு விளையாடினார்,
தற்பொழுது எவிக்ட் ஆகி வெளியேறினார். இந்நிலையில், இவர் ஒரு பேட்டியில் தான் கர்ப்பமாக இருந்தது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், “ஒரு முறை நான் கார்ப்பமாகி இருக்கிறேன். ஆண் நண்பருடன் ஏற்பட்ட பழக்கம் தான் காரணம். அதனால் தான் நான் கர்ப்பம் ஆனேன். நான் கர்ப்பமான விஷயம் எனக்கே தெரியாது. எனக்கு மாதவிடாய் சரியான காலத்தில் வராது. 6 முதல் 8 மாதத்திற்கு ஒரு முறை தான் வரும்.அதனால் எனக்கு தெரியவில்லை. என் அம்மா தான் பார்த்து என்னை கண்டு பிடித்தார். வயிறு தொட்டு பார்த்து கர்ப்பம் என தெரிந்தது.
அப்போ ரொம்ப சின்ன வயசு என்பதால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு சென்று கருக்கலைப்பு செய்தார். என்னை பொறுத்தவரை அது சரியான முடிவுனு தான் சொல்வேன். அந்த நபருடன் இன்னும் நான் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். இந்த விஷயம் தெரிந்தும் எங்க அம்மா என்னை அடிக்கவே இல்லை” என்று கூறியுள்ளார்.இதனை என் அம்மா தான் வயிற்றை பார்த்து கண்டுபிடித்து கர்ப்பத்தை கருக்கலைப்பு செய்ததாகவும் தெரிவித்தார். இதனால் என் அம்மா என்னிடம் கோபப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார் நடிகை ஷகீலா.