சதி செய்த பிரபல ரிவி…! சமார்த்தியமாக பிக் பாஸிலிருந்து வெளியேறிய கமல்ஹாசன்…!

நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதற்கான உண்மையான காரணம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிக் பாஸ் பிரபல ரிவியில் கடந்த 7 ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டும் 8வது சீசனை ஆரம்பிக்க உள்ளது. இதுவரை இந்நிகழ்ச்சியினை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். ஆனால் இந்த ஆண்டு தனக்கு வேலை இருப்பதாக கூறிவிட்டு இந்நிகழ்ச்சியிலிருந்து விலகினார். இந்நிலையில் குறித்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க விஜய் சேதுபதியை பிரபல ரிவி ஏற்பாடு செய்துள்ளது.இவர் தான் தொகுப்பாளர் என்பதை ப்ரொமோ காட்சி மூலம் மக்களுக்கும் அறிவித்துள்ளது. ஆனாலும் கமல்ஹாசன் சொந்த வேலையை காரணம் காட்டி விலகியது உண்மையல்ல என்ற சந்தேகம் அநேகருக்கும் எழுந்து வருகின்றது.

ஆரம்பத்தில் இந்நிகழ்ச்சியில் கொண்டாடிய ரசிகர்கள் கடந்த சீசனில் பிரபல சேனல் டிஆர்பிக்காக செய்த செயலால் திட்டித் தீர்த்ததுடன், கமலின் பெயரும் கெட்டப்பெயரானது.எஸ்கேப் ஆகிய கமல்ஹாசன்
கடந்த சீசனில் பிரதீப் ஆண்டரனி அதிக ரசிகர்களால் விரும்பப்பட்ட போட்டியாளராக இருந்தார். ஆனால் பெண்களுக்கு அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினர்.

இதனால் கமல்ஹாசன் மீது மக்கள் வெறுப்பை காட்ட ஆரம்பித்ததுடன், உள்ளே இருந்த போட்டியாளர்கள் பேசியதும் கமலுக்கு எதிராகவே திரும்பியுள்ளது.ஒரு கட்டத்தில் டிஆர்பிக்காக பிரபல ரிவியில் இவ்வாறு செய்ததை புரிந்து கொண்ட கமல்ஹாசன், நிகழ்ச்சி முடியவிருக்கும் தருவாயில் பிரதீப் ஆண்டனிக்கு நான் ரெட் கார்டு கொடுக்கவில்லை… நீங்கள் முன்மொழிந்ததை தான் நான் வழிமொழிந்தேன் என்று தன்னிலை விளக்கம் அளித்திருந்தார்.

அப்பொழுதே கமல்ஹாசன் வெளியேறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் பிக் பாஸ் சீசன் 8ல் கமல்ஹாசன் விலகியது அவரது முடிவு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், பிரபல ரிவி இந்த ஆண்டு கமல்ஹாசனை இந்த முடிவை எடுக்க வைத்துள்ளதாம்.அதாவது கமல் எதுவும் கூறுவதற்கு முன்பு பிரபல ரிவி சில நடிகர்களிடம் பிக்பாஸ் 8ஐ தொகுத்து வழங்குவது குறித்து பேசிவருவது நடிகர் கமல்ஹாசனுக்கு தெரிந்துள்ளது. அப்போதே கமல் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி விடுவார் என அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது.

அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் இருந்து விலகியது கமலின் முடிவு என்றுதான் தற்போது வரை எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் கமலை இந்த நிலைமைக்கு தள்ளியது விஜய் டிவி என தெரிய வந்திருக்கிறது. ஆதலால் தான் உடனே அதிகாரப்பூர்வமாக தன்னுடைய வெளியேற்றத்தினை அறிவித்துள்ளார் என்று பலரும் கூறி வருகின்றனர். தற்போது கமலஹாசன் அமெரிக்காவில் AI தொழில்நுட்பத்தை பற்றி மூன்று மாத பயிற்சி படிப்பில் படித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *