கோலாகலமாக நடந்து முடிந்த அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் திருமணம்…! வெளியாகிய வெட்டிங் போட்டோஸ்…!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் படத்தின் மூலம் அறிமுகமானவர் அசோக் செல்வன். இதனை அடுத்து சோலோ ஹீரோவாக தெகிடி படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது.பின்னர் ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், நித்தம் ஒரு வானம் என அவரது படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. 2012 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் அப்பாவி இளைஞனாக என்ட்ரி கொடுத்த, அசோக் செல்வன், அந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா போன்ற நடிகர்களுடன் சேர்ந்து ரகளை செய்து இருப்பார். இப்படத்தின் வெற்றிக்கு பின், நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அசோக் செல்வன்.ஏராளமான பீட்சா 2, தெகிடி, கூட்டத்தில் ஒருவன், சம் டைம்ஸ், ஓ மை கடவுளே போன்ற தரமான கதை அம்சம் கொண்ட படங்களாகும்.

ஓ மை கடவுளே படத்தின் மூலம் அசோக் செல்வனுக்கு ஏராளமான பெண் ரசிகர்கள்கிடைத்தார்கள். அதே போல வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மன்மதலீலை படத்தில், மூன்று ஹீரோயின்களுடன் முத்தக்காட்சி, படுக்கையறை காட்சி என புகுந்துவிளையாடி இருப்பார். நேர்த்தியான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அசோக் செல்வனின் சமீபத்திய படங்களான நித்தம் ஒரு வானம், போர் தொழில் போன்ற படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.செல்வன், நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை காதலித்து வந்தார். இருவரும் ப்ளு ஸ்டார் என்ற படத்தில் சேர்ந்து நடித்த போது காதலிக்க தொடங்கினர். இவர்களின் காதலுக்கு இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டதால்,

செப்டம்பர் 13ந் தேதி திருமணம் நடைபெறும் என்ற சோஷியல் மீடியாவில் செய்திகள் பரவின. குறிப்பாக கடைசியாக சரத்குமாருடன் இணைந்து நடித்த போர் தொழில் படம் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வன், நடிகர் அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.அதன்படி இன்றைய தினம் இவர்களின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இது குறித் புகைப்படங்களை ரம்யா பாண்டியன் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *