கோபத்தில் நிறைய இழந்துட்டேன்…! விஜய் ஆண்டனி சொன்ன அந்தவொரு வார்த்தை- இவருக்கு இப்படியொரு பக்கமா…?

“ கோபத்தில் நிறைய இழந்துட்டேன்..” என விஜய் எண்டனி நீண்ட நாட்களுக்கு பின் மனம் திறந்து பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். இவர் நடிப்பில் இறுதியாக ரோமியோ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்கநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கியிருந்தார். இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி ஒரு நடிகர் மட்டுமல்ல இசையமைப்பாளர், பாடகர் என பல் திறமை கொண்டவர். இவருடைய 16 வயது மகள் மீரா கடந்த வருடம் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது விஜய் ஆண்டனி மீண்டு வர ஆரம்பித்துள்ளார்.

தொகுப்பாளருக்கு தரமான பதிலடிக் கொடுத்த நடிகர் இந்த நிலையில் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்துள்ளார். அதில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, “ நீங்கள் எதற்காவது அதிகமாக கோபம் கொண்டிருக்கீங்களா? அப்படி கோபம் வந்தால் என்ன செய்வீர்கள்?” தொகுப்பாளர் கேட்கிறார். அதற்கு பதில் கொடுத்த விஜய் ஆண்டனி, “ தற்போது எனக்கும் கோபம் வருவது மிகக் குறைவு.

ஆனால் ஆரம்ப காலங்களில் எனக்கு அதிகமாக கோபம் வரும். அந்த சமயத்தில் செல்போனை தான் அதிகம் உடைப்பேன்.. அப்படியொரு 5 செல்போன் உடைந்திருக்கிறது. கோபத்தினால் நிறைய இழந்து விட்டேன்…” என ஓபனாக கூறியுள்ளார்.இதனை கேட்ட போது தொகுப்பாளர் உட்பட நெட்டிசன்களுக்கும் அவருடைய மோசமான நாட்கள் ஞாபகத்திற்கு வந்திருக்கும். இந்த காணொளி மில்லிக்கணக்கான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், “ விஜய் ஆண்டனிக்குள் இப்படியொரு முகம் உள்ளதா?” என கருத்துக்களையும் குவித்து வருகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *