குடிபோதையால் அரங்கேறிய அதிர்ச்சி…! குழந்தைகளுடன் விபத்தில் சிக்கிய பிரபல பாடகி…! அதிர்ச்சியில் ரசிகர்கள் …!

பிரபல பாடகி சின்மயி குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது விபத்தில் சிக்கியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியளித்துள்ளது.பாடகி சின்மயி தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னணி பாடகியாக வலம்வரும் சின்மயி, சமூக வலைத்தளங்களில் அதிரடியாக பல கருத்துக்களை வெளியிடுவதுடன், பெண் வன்கொடுமைக்கு எதிராகவும் குரல் கொடுப்பவர் ஆவார்.தென்னிந்திய ரசிகர்களை, தன்னுடைய இனிமையான குரலால் வசீகரித்தவர் பிரபல பாடகி சின்மயி. 2002 ஆம் ஆண்டு, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கன்னத்தின் முத்தமிட்டாள்’ படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இவர் பாடிய, சிறு தெய்வம் தந்த பூவே பாடல்,

சின்மயியை பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைய செய்தது.இதை தொடர்ந்து, தற்போது சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில். பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். பாடகி என்பதை தாண்டி, பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார் சின்மயி. ராகுல் என்பவரை திருமணம் செய்த இவர் 8 ஆண்டுகளுக்கு பின்பு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். இந்நிலையில் இவர் குழந்தைகளுடன் காரில்

சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராமல் விபத்தில் சிக்கியுள்ளார். இவர் விபத்தில் சிக்கியதை எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குடிபோதையில் எதிரே வந்த ஆட்டோ ஓட்டுனர் இவரது காரில் வந்து மோதியுள்ளார்.பின்பு நிற்காமல் ஆட்டோ ஓட்டுநர் எஸ்கேப் ஆகியுள்ளார். ஆனால் தனக்கோ தன்னுடன் இருந்தவர்களுக்கே எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றும் தாங்கள் பத்திரமாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைவதாக கூறியுள்ளார். மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர்கள் என்றும் சின்மயி பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *