நடிகை திரிஷாவால் மது அருந்தாமல் இருக்க முடியாது என்றும் அவர் படப்பிடிப்பின்போது மது அருந்திய சம்பவம் ஒன்றை குறித்து சினிமா விமர்சகர் செய்யாறு பாலு நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். நடிகை திரிஷா தமிழ் சினிமாவில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை நெருங்கி தற்போதும் முன்னணி நாயகியாக வளம் வருபவர் திரிஷா. தமிழை கடந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி படங்களில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி இருக்கிறார்.தற்போது இவர் நடிப்பில் “லியோ” படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே போல அஜித்தை நடிப்பில் துவங்கவுள்ள “விடாமுயற்சி” படத்திலும் அவரே நாயகியாக நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குடிக்கு அடிமை இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமா விமர்சகரும், பத்திரிகையாளருமான செய்யாறு
பாலு திரிஷாவின் குடி பழக்கம் குறித்து பேசியுள்ளார். அந்த பேட்டியில், திரிஷா குடிபோதைக்கு அடிமையானவர் என தெரிவித்து, அவரால் குடிக்காமல் இருக்கவே முடியாது என கூறியிருக்கிறார்.பிரபல நடிகர் ஒருவரின் படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது, மது வாங்கி வந்து அதே இடத்திலேயே, மது அருந்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.